Tuesday, 30 January 2018

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 9 - Pandyan Mallar


மூவேந்தர்கள் தாங்கள் எழுதிய மெய்க்கீர்த்திகளில் எங்குமே தங்களை க்ஷத்திரியர் என்று குறிப்பிட்டுக்கொண்டது கிடையாது, மாறாக திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றுதான் தங்களை பெருமையாக கூறிக்கொண்டனர். இதற்க்குப் பல சான்றுகள் உள்ளன அவற்றை கீழே காண்போம்.


சேர, சோழ, பாண்டிய வேந்தர்களின் மெய்க்கீர்த்திகள் (தேவேந்தர சக்கரவர்த்தி, திரிபுவச் சக்கரவர்த்தி)

பராந்தக நெடுஞ்சடையன் (768-815)

 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.
 1.1.1 (01)

"கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
 பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்"

1.4. வீர பாண்டியன் (946-966)

 சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி
 1.4.1 (06)

"ஸ்வஸ்திஸரீ
 சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு
 இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும்
 ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும்
 வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும்
 ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த 5
 பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன்
 மன்னவர்க்கோன் இராசமல்லன்"

1.5 சீவல்லபன் (1120 -1146)
 1.5.1 (07)

"கோச்சடைய பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
 சீ வல்லப தேவர்க்கு"

1.6. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (1130 - ....)
 1.6.1 (09)

"கோமாற பன்ம ரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ பராக்கிரம
 பாண்டிய தேவர்க்கு"

1.7. சடையவர்மன் பராந்தக பாண்டியன் (1130 - .... )
 1.7.1 (10)

"ஸ்வஸ்திஸரீ
 திருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வளர
 அருமறைநான் கலைவளர அனைத்துலகும் துயர்நீங்கத்
 தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்தி(ர)னோ டினிதிருந்த
 மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி"

1.8. சடையவர்மன் வீரபாண்டியன் (1175 - 1180)
 1.8.1 (11)
 "திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்"

1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218)
 1.9.1 (12)
 "திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீ குலசேகர தேவர்க்கு"

1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) -2
 1.9.2 (13)

"திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்
 மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிலுள்ளாலை
 ஸரீவல்லவன் பீடத்துப் பள்ளிப் பீடம்"

1.9 சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) - 3
 1.9.3 (14)
 "கோச்சாடய பன்மரான திரிபுனச்
 சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"

1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239)
 1.10.1 (15)
கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசுந்தர
 பாண்டிய தேவர்க்கு"

1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239) - 2
 1.10.2 (16)

"திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசோணாடு
 கொண்டு முடிகொண்ட சோழபரத்து வீராபிக்ஷேகம்
 பண்ணி அருளிய
 ஸரீசுந்தர பாண்டியதேவர்கு"

1.11. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)
 1.11.1 (17)

"சிரீகோச் சடைய வன்மரான
 திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய
 தேவர்க்கு"

1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268)
 1.12.1 (18)

"கோச்சடைய பன்மரான
 திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு"

1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268) - 2
 1.12.2 (19)

"கோச்சடைய வன்மரான திரிபுவனச் - 5
 சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு"

1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1285)
 1.13.1 (20)

"கோமாற வன்ம ரான
 திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"

1.14. மாற வர்மன் விக்கிரம பாண்டியன் (1283 - 1296)
 1.14.1 (21)
 "ஸரீ கோமாற பன்மரான
 திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய தேவர்க்"

2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014) - 2
 2.1.2 (25)
ஸரீராச ராசன்
 இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
 புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40"

2.2 முதலாம் இராசேந்திரன் (கி. பி 1012 - 1044)
 2.2.1 (26)

"முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10
 சுி(இ)ந்தர முடியும் இந்திரன் ஆரமும்"

2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 1
 2.4.1 (30)
 "ஸ்வஸ்திஸரீ
 இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
 கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப்
 பேராற்றங்கரை கொப்பத்து
 ஆகவ மல்லனை அஞ்சு வித்தவன்"

2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 5
 2.4.5 (34)
 "ஆகவ மல்லனொடு போர்ச்செயம் புரியுங் காலை - - - - - - - - -5
 அரிநிகர் தன்திருத் தமய னாகிய

...............னில் ராசாதி ராசன்முன்
 நேராம் அரசரை நெடும்விசும் பேற்றி
 அந்தர வாளத்து அரம்பையர் எதிர்கொள
 இந்திர லோகம் எய்திய பின்பு - - - - - - - - - - - - - - - 10"

2.6. வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) - 3
 2.6.3 (39)

"கோப்பர கேசரி வன்மரான
 திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு -10"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) - 3
 2.8.3 (43)
 "கோவிராச கேசரி வன்ம ரான
 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க
 சோழ தேவர்க்கு"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) -4
 2.8.4 (44)

"கோவிராச கேசரி பன்மரான
 சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) - 6
 2.8.6 (46)

"கோவிராச கேசரி வன்மரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ
 தேவர்க்கு"
  
1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268)
 1.12.1 (18)

"கோச்சடைய பன்மரான
 திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு"

1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268) - 2
 1.12.2 (19)

"கோச்சடைய வன்மரான திரிபுவனச் - 5
 சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு"

1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1285)
 1.13.1 (20)

"கோமாற வன்ம ரான
 திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"

1.14. மாற வர்மன் விக்கிரம பாண்டியன் (1283 - 1296)
 1.14.1 (21)
 "ஸரீ கோமாற பன்மரான
 திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய தேவர்க்"

2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014) - 2
 2.1.2 (25)
 "ஸரீராச ராசன்
 இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
 புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40"

2.2 முதலாம் இராசேந்திரன் (கி. பி 1012 - 1044)
 2.2.1 (26)

"முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10
 சுி(இ)ந்தர முடியும் இந்திரன் ஆரமும்"

2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 1
 2.4.1 (30)
 "ஸ்வஸ்திஸரீ
 இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
 கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப்
 பேராற்றங்கரை கொப்பத்து
 ஆகவ மல்லனை அஞ்சு வித்தவன்"

2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 5
 2.4.5 (34)
 "ஆகவ மல்லனொடு போர்ச்செயம் புரியுங் காலை - - - - - - - - -5
 அரிநிகர் தன்திருத் தமய னாகிய
 ...............னில் ராசாதி ராசன்முன்
 நேராம் அரசரை நெடும்விசும் பேற்றி
 அந்தர வாளத்து அரம்பையர் எதிர்கொள
 இந்திர லோகம் எய்திய பின்பு - - - - - - - - - - - - - - - 10"

2.6. வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) - 3
 2.6.3 (39)

"கோப்பர கேசரி வன்மரான
 திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு -10"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) - 3
 2.8.3 (43)
 "கோவிராச கேசரி வன்ம ரான
 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க
 சோழ தேவர்க்கு"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) -4
 2.8.4 (44)

"கோவிராச கேசரி பன்மரான
 சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு"

2.8. குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) - 6
 2.8.6 (46)

"கோவிராச கேசரி வன்மரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ
 தேவர்க்கு"

2.9. விக்கிரம சோழன் (கி. பி 1018 - 1135 ) - 1
 2.9.1 (47)
 "கோப்பர கேசரி வன்ம ரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீவிக்கிரம சோழ - 80
 தேவர்க்கு"

2.9. விக்கிரம சோழன் (கி. பி 1018 - 1135 ) - 2
 2.9.2 (48)

"கோப்பர கேசரி பன்ம ரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் உடையார் ஸரீ விக்கிரம
 சோழ தேவர்க்கு"

2.10. குலோத்துங்கன் II. (கி. பி 1133 - 1150 ) - 1
 2.10.1 (50)

"கோவிராச கேசரி பன்ம ரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க சோழ - 40
 தேவர்க்கு"

2.10. குலோத்துங்கன் II. (கி. பி 1133 - 1150 ) - 2
 2.10.2 (51)
 "கோவிராச கேசரி பன்ம ரான - 50
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க
 சோழ தேவர்க்கு"

2.10. குலோத்துங்கன் II. (கி. பி 1133 - 1150 ) - 3
 2.10.3 (52)

"கோவிராசகேசரி வன்ம ரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க - 15
 சோழ தேவர்க்கு"

2.11. இராசராசன் II (கி. பி 1146 - 1163 ) - 1
 2.11.1 (53)

"கோப்பர கேசரி
 வன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் - 15
 ஸரீ இராச ராச தேவர்க்கு"

2.11. இராசராசன் II (கி. பி 1146 - 1163 ) -2
 2.11.2 (54)
 "வருபகைய கத்தின்றி விழைந்துகாத லுடன்சேர
 இந்தி ரன்முதற் திசாபாலர் எண்மரும்ஓரு வடிவாகி"

2.12. இராசாதிராசன் II. (கி. பி 1163 - 1178) - 1
 2.12.1 (55)

"கோவிராசகேசரி பன்மரான
 திரிபுவன சக்கரவர்த்திகள்
 மதுரையும் ஈழமும் கொண்டருளின - 15
 ஸரீ ராசாதி ராச தேவர்க்கு"

2.12. இராசாதிராசன் II. (கி. பி 1163 - 1178) - 2
 2.12.2 (56)

"கோவிராச கேசரி வன்மரான - 10
 திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ இராசாதிராச
 தேவர்க்கு"

2.12. இராசாதிராசன் II. (கி. பி 1163 - 1178) -3
 2.12.3 (57)
 "கோவிராச கேசரி
 வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீராசாதிராச
 தேவர்க்கு"

2.13. குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 ) - 2
 2.13.2 (59)
 "கோப்பர கேசரி வன்மரான
 திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன்
 முடித்தலையுங் கொண்டருளிய ஸரீ குலோத்துங்க"
 சோழ தேவர்க்கு

2.13. குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 ) -3
 2.13.3 (60)
கோப்பர கேசரி வன்மரான
 திருபுவனச் சக்கரவர்த்திகள் மதுரைகொண்டு பாண்டி
 யன் முடித்தலை கொண்டருளிய ஸரீ குலோத்துங்க சோழ - 25"
 தேவர்க்கு

2.14. வீரதேவன் - 1
 2.14.1 (58)
 "கோப்பர கேசரி வன்மரான
 திரிபுவனச் சக்கரவர்த்திகள்
 மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன்
 முடித்தலை யுங்கொண்டு வீராபி ஷேகமும்
 விஜயாபி ஷேகமும் பண்ணி யருளின - 20
 ஸரீ திரிபுவன வீரதேவர்க்கு"

2.14. வீரதேவன் - 2
 2.14.2 (63)
 "ஸ்வஸ்திஸரீ
 திருவாய்க் கேழ்வி முன்னாகத்
 திரிபுவனச் சக்கர வர்த்திகள்
 மதுரையும் ஈழமும் கருவூரும்
 பாண்டியன் முடித்தலையுங் கொண்டு
 வீராபி ஷேகமும் விஜயாபி ஷேகமும் - 5
 பண்ணியருளிய திரிபுவன வீரதேவர்க்குயாண்டு 33"

2.15. இராசராசன் III. (1216 - 1256) - 1
 2.15.1 (64)

"விராசகேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராச தேவர்க்கு – 15"

இவ்வாறு மூவேந்தர்கள் தாங்கள் எழுதிய மெய்க்கீர்த்திகளில் சக்கரவர்த்திகள் என்று தங்களை பெருமையாக கூறிக்கொண்டனர்  என்பதற்க்கு சான்றுகள் மிக தெளிவாக உள்ளன.




(தொடரும்)

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 8 - Pandyan Mallar


தாலகுண்டாக் கல்வெட்டு பல்லவர்கள் பிராமணர் அல்ல என தெளிவாக கூறிய போதிலும் அவர்கள் தங்களை பாரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிப் பெருமைகொண்டதை திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் நந்திவர்மனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

“ஸ்வஸ்தி ஶ்ரீ பாரத் (வாஜ கோத்ர ) திலக
ப்ரந்மா க்ஷத்ர குலோத்பவம் பல்லவ
மஹாராஜ – பரமேஸ்வரநாகிய ஶ்ரீ
தந்திநந்திவர்மற்கு யாண்டு 3 றாவது”

(S.I.I.Vol.XII, 48)


அசுவத்தாமானின் மகன் பல்லவன் என்று பல்லவ சாசனங்களில் கூறப்பட்டுள்ளது. “அமராவதியில் ஒரு துாணிற் பொறித்த பல்லவ சாசனப் பகுதியில் ( SII.Vol. I, No. 32) அசுவத்தாமன் மதனி என்னும் அப்ஸரஸ்ஸை மணக்க அவள் அசோக மரத்தின் பல்லவங்கட்கிடை மகவினையீன்றபோது அம்மகவைப் பல்லவத் தொட்டிலிற் கண்டு, பல்லவன் என்று அசுவத்தாமன் பெயரிட, அக்குழவி பல்லவன் என வழங்கப்பட்டதென்று கூறுதலானும் பலலவன் திரைதரு மரபின் உண்டாதல் அறியலாம்.


இவற்றாற் பல்லவர் தம்மைப் பாரத்வாஜ கோத்திரத்தினர் என்று கூறிக்கொண்டே ராஜ பரம்பரையினராகவுங் கூறுதற்குக் காரணம் இனிது தெளியலாம். பாரத்வாஜ கோத்திரத்துத் தோன்றி அஹிச்சத்ர நாடாண்டதனால் இருகுலப் பெயரும் புனைந்தனராவர். பிற்கால சாசனங்கள் இவரைப் பிரம கூடித்திரிய குல மென்று கூறுவது கேட்டுணர்க.


மகேந்திர பல்லவனின் சிராப்பள்ளிக் குன்றிற் பொறித்த சாசனப் பகுதியில் அவன் தன் விருதுப் பெயர்களினிடையே 'குவத் ரோணன்” எனக் கூறிக்கொள்கிறான். 'குவத்ரோணன்' என்ற சொற்கண் குவம் என்பது நீரிற் பிறப்பதற்குப் பெயர். இதனால் நீரிற் பிறந்த துரோண குலத்தவன் என அவன் தன்குடிப் பிறப்புப் பெயரைப் புனைந்தது தெரியலாம். இவ்வாறு கூறுவது தன் குடி முதல்வன் கர்ப்பவாசமறியாதவன் என்பது கருதிப் போலும். துரோணர் பரத்வாஜருக்குக் கருப்பாசயத்திற் றங்காமற் பிறந்தார் என்பது பாரதம். (ஆதி பர். பக். 250).


பல்லவ சாசனங்களின்படி நோக்கின் பல்லவன் என்பவன் துரோணனுக்குப் பேரனாவன். (அமராவதித் தூண் கல்வெட்டு   SII.Vol. I, No. 32 பார்க்க)








‘'தோண மந்தைப் பாரத்வாசச் சதுர்வேதிந்” (S.I.I 532) என்னும் தொடரும் இக் கருத்கை வலியுறுத்தும் (ரா. இராகவய்யங்கார் - தமிழகக் குறுநில வேந்தர்)

இவ்வாறு பல்லவர்கள் தங்களை பெருமைபடுத்துவதற்க்காக கல்வெட்டில் பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த பிரம கூடித்திரியர் என்று கூறியதை தவறாக புரிந்துகொண்ட ஒருசிலர் பல்லவர்கள் பிராமணர் என்றும், ஒருசிலர் பல்லவர்கள் பிராமண ஆனுக்கும் க்ஷத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றும் கூறிவருகின்றனர்.

அதேபோல் இன்றைய வன்னியர்களின் மூதாதையர் என கருதப்படும் ருத்ர வன்னியர் கி. பி 6 -ஆம் நூற்றாண்டில் ஜாம்பவ மகாமுனிவரின் வேள்வியில் தோன்றி வாதபியை வெற்றி கொண்டார் என வன்னிய புராணம் கூறுகிறது. அவர்களின் சந்ததிகளான இன்றைய வன்னியர்களும், சம்புவராய மன்னரும் தங்களை சம்புகுலத்தை சேர்ந்தவர்கள் என்று தெளிவாக குறிப்பிடுகிறனர்.

பிற்காலத்தில் பிராமணரல்லாத மன்னர்களில் சிலர்கூடத் தாங்கள் “காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கெளசிகக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.


காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்த சொக்கநாத நாயக்கரின் பேரனும், ரங்க்கிருஷ்ணமுத்து வீரப்ப நாயக்கர் அவர்களின் புதல்வனுமான விஸ்வநாத நாயக்கர் ஐயன்” என்று ஒரு நாயக்கர் மன்னர் குறிப்பிடப்படுகிரார். 

(ஆதனூர் – சாத்தனூர் செப்பேடு, வரலாற்று இதழ் -1, நடன. காசிநாதன் - வன்னியர் மாட்சி பக். 63)


அரியலூரை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் தங்களை "விதிஹோத்திர கோத்திரத்தினர்கள்" என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதை அரியலூர் மழவராயரின் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது (A.R.E No.89 of 1926 - 1927).

மழவராயர்களும், கடந்தையர்களும் தங்களை "வன்னியர் குல கிரி வம்சம்" என்று கல்வெட்டில் குறிப்பிட்டனர் (South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D).



“……………………இக் கோயிற் காணியுடைய சிவபிராமணன்
அகத்தீஸ்வரமுடையானான
சித்திரமேழி பட்டனேன்"


(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண்: 144/2004, 145 / 2004, 146 / 2004, 147 / 2004, 149 / 2004 மற்றும் 152 / 2004),

தஞ்சாவூரை ஆட்சி புரிந்த மன்னன் பன்னஸ்ஜோகோஜி தளவி என்பவர் “காஸ்யப கோத்திரத்தில் தோன்றியவர் என்றும், யெகோஜி மகாராஜர் கெளசிகக் கோத்திரத்தைப் பாதுகாத்தவர் என்றும் மராத்தியர் செப்பேடுகளில் புகழப்படுகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்தியர்கள் வேளாண்குடியை சேர்ந்த க்ஷத்திரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு அரசு வெளியிட்ட கல்வெட்டு காலாண்டிதழ் -14 பக்கம்  26 -ல் கெளடல்யன் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏர் பூட்டி உழவு செய்பவன் காசிப மரபில் (சூரிய மரபில்) வந்தவன் என்றும் மக்கள் தலைவன் என்றும்  போற்றப்படுவான் என்று கூறப்பட்டுள்ளது.


(கல்வெட்டு காலாண்டிதழ் -14 பக்கம் . 26 - தமிழ்நாடு அரசு).


இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி.  இந்திரனுடைய ஆயுதம் வச்சிரம் என்றும் கூறப்படுகிறது. ஆதால் இந்திரன் வழி வந்தவர்கள்  தங்களை காசிப மரபில் (சூரிய மரபில்) வந்தவன் என கூறிக்கொள்கின்றனர்.


விருத்தாசலத்துக்கு அருகிலுள்ள முகாசாபரூர் வன்னியப் பாளையக்காரர்கள் தாங்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்கள் ஆவணங்களில் குறித்துள்ளனர்.

( நடன. காசிநாதன் - வன்னியர் மாட்சி பக். 63)


இவ்வாறு பல சமூகத்தைச் சார்ந்த மன்னர்களும் தங்கள் குலத்தை உயர்வாக காட்ட புராணங்களிலிருந்து சிலரை தன்முன்னோராக காட்டிக்கொள்ள முற்ப்பட்டனர்.


சில காலங்களுக்குப்பின் ஸ்மிருதி பிராமணர்கள் ஆதியில் வாழ்ந்த க்ஷத்திரியர்கள் எல்லோரும் பரசுராமன் காலத்திலேயே இறந்துவிட்டார்கள் என்றும், இப்பொழுது க்ஷத்திரியர் என்று அழைக்கப்படுபவர்கள் அணைவரும் பிராமணர்கள் கலப்பு இனத்தவர்கள் (பிராமண ஆணுக்கும் க்ஷத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் - பிரமக்ஷத்திரியர்) என்ற ஒரு புதிய கருத்தை புராணங்கள் மூலமாக மக்களுக்கு பறப்ப தொடங்கினர்.


இதை கால ஓட்டத்தில் புரிந்துகொண்ட மன்னனும், மக்களும் ஸ்மிருதி பிராமணர்களின் கருத்துக்களை முழுமையாக ஏற்க்கவில்லை. பின்பு ஸ்மிருதி பிராமணர்கள் மன்னனுக்கு எதிராக ரகசிய சதிவேளையில் ஈடுபட தொடங்கினர். ஆனால் அவர்களின் முயற்ச்சி ஈடேரவில்லை.


ஸ்மிருதி பிராமணர்களின் நோக்கங்களை புரிந்துகொண்ட பல மன்னர்களும், மக்களும், அவர்கள் வழங்கிய க்ஷத்திரியர் போன்ற பட்டங்கங்களை தொடர்ந்து பயண்படுத்தாமல் தங்களுடைய பூர்வீக அடையாலங்களான தேவேந்திர சக்கரவர்த்தி, உடையார், தேவர், வேளான், மூவேந்த வேளான் போன்ற பட்டங்களை பயன்படுத்தினர்.


தேவேந்திரன் ( தேவர் + இந்திரன் ) என்பது அரசர்க்கெல்லாம் அரசன் என்னும் உன்னதமான சொல் இருக்கும்போது, அதைவிட குறைவான பொருள் உள்ள க்ஷத்திரியர் என்னும் பட்டத்தை யாராவது பயன்படுத்துவார்கள? ஆதலால்தான் மள்ளர்கள் தங்களை தேவேந்திர சக்கரவர்த்தி, வேந்தர் குல வேளான், தேவேந்திர குல மள்ளர், தேவேந்திர குடும்பர், மூவேந்த வேளார், மூவேந்த வேளான், தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.


தேவேந்திரன் விருதுகள்:

 1. வெள்ளை யானையின் பேறில் பட்டணம் மெறவனை வருதல்
 2. பொன்முடி அணிதல்
 3. பூமுடி அணிதல்
 4. பதினாறு சீர்
 5. பதினெட்டாயுதம்
 6. புரவியிலேறி மூவேந்தர்களுடன் பட்டணம் வலம் வருதல்
 7. ஈஸ்வரரின் இணைமுடி
 8. அமரர்களின் இணைமுடி
 9. பொன்முடியில் பூசனம்
 10. வாடாத மாலை மார்பில் அணிதல்
 11. வெட்டுப்பாவாடை
 12. வீணைகள் முழக்கம்
 13. வெள்ளைக் குடை
 14. வெங்களிறு
 15. டால்
 16. மத்தாளம்
 17. கைத்தாமம்
 18. மகேஷ்பறம்
 19. மூவரசர்கள் முடி மணம் சூட்டுதல்

(பழனி  முருகன் கோவில்  செப்பு பட்டையம் )

இவை அணைத்தையும் தேவேந்திர குல மக்கள் மட்டுமே பயன் படுத்திக்கொள்ள முடியும். இவ்வுரிமை மூவேந்தர்கள் தன் சமூக மக்களான மள்ளர் குல மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.


போரில் வெற்றிபெற்ற மன்னன் விழா எடுத்ததை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அது போன்ற வெற்றி விழா 326 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பாண்டியர்களால் ராஐபாளையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னர் ஆட்சி நடத்த பயன்படுத்தும் உரிமைகளாக தொல்காப்பியம் குறிப்பிடும்

"படையுங் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வயன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க் குரிய"

( தொல் பொருள் மரபியல் 72 )

இவ்வுரிமையை இம்மரபினர்க்கு பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்திலுள்ள கல்வெட்டும் (ARE 432/1914) இராமநாதபுரம் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்திலுள்ள கல்வெட்டும் (ARE 588/1926) சான்று கூறுகிறது. இவரை தேவேந்திரக் குடும்பன் என்றும், மன்னர்க் குரிய உரிமைகளாகிய

 1. வெள்ளை யானை
 2. வெண்வட்டக்குடை
 3. பதினாறுகால் பந்தல்
 4. பதினெட்டு மேளம்
 5. பஞ்சவன் விருது
 6. கெராடி
 7. சிலம்பு
 8. தேர்
 9. பகற்பந்தம்

முதலிய சகல உரிமைகளுக்கும் இவர் உரியவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.


மேலும் சக்கரவர்த்திகள் பயன்படுத்தக்கூடைய மிக உயரிய விருதுகளான கிழே கொடுக்கப்பட்டவைகள் அணைத்தையும் தேவேந்திர குல சமூகத்தார்கள் பயன்படுத்தியதற்க்கான சான்றுகளாக காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம் சான்று பகர்கிறது.


"தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர்"

(காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்.)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இது போன்ற உரிமைகள் இந்தியாவில் வேறு எந்த சமூகத்திற்க்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு (ARE 432 / 1914) இவர் தேவலோகத்திலிருந்து சென்னெல், கன்னென், கதலிபனை வித்துக்களுடன் ரிஷிபத்தையும் சாவியையும் கொண்டு வந்து பூமியில் பன்னீராயிரம் கிணறுகள் தோண்டி வேளாண்மை கண்டனரென்று குறிப்பிடப்பட்டுள்ளது.


செங்கோட்டுப் பள்ளில் இவரின் முன்னோர் மூவேந்தர் வேண்டுகோளின் மேல் தேவலோகம் சென்று நெற்பயிரைக் கொண்டு வந்து பூமியில் பயிரிட்டு வேளாண்மை கண்டு நாட்டைச் செழிப்பித்த செய்தியும் கண்டுள்ளது நினைவு கூரத்தக்கது.

 (செங்கோட்டுப் பள்ளு செ. 208. 8 விளக்கக் குறிப்பு பக். 222 – 23 )


இவ்வாறு மள்ளர் குல மக்கள் தாங்கள் தேவலோகத்திருந்து வந்தவர்கள் என்றும், தேவேந்திரனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர். ஆதலால்தான் அச்சமூத்தின் வழிவந்த மூவேந்தர்களும் இந்திரன் ஆரத்தை அணிந்து கொண்டும் இந்திரன் முடியை சூடிக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆதலால்தான் தங்களை சக்கரவர்த்தி என்றும், தேவேந்திர சக்கரவர்த்தி என்றும், திரிபுவன சக்கரவர்த்தி என்றும், தேவேந்திர வல்லவன் என்றும் பெருமையாக மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டிலும், செப்பேட்டிலும் எழுதிக்கொண்டனர். தேவேந்திர வல்லவனை குடும்பர் குல முதல்வன் என பழனி முருகன் கோவிலில் மூவேந்தர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட செப்பேடு சான்று பகர்கிறது.

(தொடரும்)