Tuesday, 25 October 2016

பகுதி 9 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

வேட்டுவர் என்ற பட்டம் இன்றைய வேட்டுவ கவுண்டர்களுக்கு மட்டும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிஞ்சி நில வேளாளர் என்று சொல்லக்கூடிய வேட்டுவ மக்கள், காடழித்து நாடாக்கும் கடுமையான உழைப்பிற்குச் சொத்தக்காரர்கள். காடு திருத்தி கழனியாக்குமுன், வரகும் திணையும், சாமையும், எள்ளும், கொள்ளும் விதைப்பவர்கள் வேடர், வேட்டுவர், காவலுவர், மாவலுவர் மற்றும் பூவலுவர் என்ற பூர்வீக மக்களாம். வர்கள் கானநெல் என்ற புதியனவாகப் போட்டு நெல் உற்பத்தியைச் செய்யத் தொடங்குபவர். வேட்டுவ பள்ளர் என்ற குடிவழியினர் 240 பேரை அடையாளங்காட்டி புலவர் கி.ஆ. குப்புராசு சரோசினி அவர்களால் கதிரவன் என்ற திங்கள் இதழில் ஒரு கட்டுரை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கான நெல்லை கண்டு விளைவித்தவர் வேட்டுவ பள்ளராவார்.

வேட்டுவத்தொழில் குறிஞ்சி நில மக்களுக்கு குலத்தொழிலாக இருந்த போதிலும் மருத நில மக்களும் வேட்டைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்க்கு சான்றாக மருதநில வேந்தன் முருகன் மான் வேட்டைக்குச் சென்ற இடத்தில் வள்ளியைச் சந்தித்து அவளை விவாகம் செய்த செய்தியும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் பல பட்டப் பெயர்களால் அழைக்கப்பெறுகின்றனர். இவற்றுல், குடும்பன், குடுமி, தென்குடும்பர், குடும்பனார், குடுமர், குடும்பிகள், குடும்பிச்சி, குடிம்பர், தகைமாண் குடுமி, குடுமி கோமான், விறன்மாண் குடுமி, மல்லர், மல்லச்சியர், மல்லாரி, மல்லி, மள்ளர், மள்ளன், மள்ளனார், மள்ளியர், மள்ளி, ஆகியன மிகவும் குறிப்பி த்தக்கதாகும்.

(அணுத்திரப் பல்லவரைசி -  வரலாற்று வித்தகர் பேராசிரியர் ம.இராசேகர தங்கமணி.)

கி.பி. 12, 13 - ஆம் நூற்றாண்டுகளில்) மள்ளர் சமுதாயத்தார் பல ஊர்களில் வாழ்ந்துள்ளனர் என அறியலாம். அவர்களில் பலர் அரசு அதிகாரிகளாகவும், படைவீரர்களாகவும், நில உடைமையாளராகவும் விளங்கினர். மள்ளர்களைக் கொங்குக் கல்வெட்டுகள் குடும்பர் என்று அழைத்துள்ளன. ஒரு கல்வெட்டு தென்குடும்பன் என அழைப்பதால் மதுரைப் பகுதியிலிருந்து கொங்கு நாட்டிற்கு இவர்கள் குடிபெயர்ந்து வந்திருக்கலாம். குடும்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவிலுக்குக் கொடை நல்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள். படைவீரராக வாழ்ந்த குடும்பர்கள் கலைகளிலும் ஈடுபாடு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.
கொங்குக் கல்வெட்டுகள் வழி அனுத்திரப் பல்லவரையன் என்று பட்டம் பெற்ற சிங்கன் சோழன், இருங்கோளர் என்று பட்டம் பெற்ற சுதன் அதிசயசோழன் என்ற இரு குடும்பரும் போற்றுதற்கு உரியவர்கள். இருவருமே நிலக்கொடை அளித்துச் சிறந்தவர்கள்!  
(வரலாற்றில் மள்ளர் – முனைவர் இரா. ப. கருணானந்தன் கல்வெட்டாய்வாளர் - தொல்லியல் துறை)
கொங்குச் சோழ மன்னன் வீரசோழதேவன் காலத்தில் அப்பகுதியில் உயர் அலுவலராகத் திகழ்ந்த தென் குடும்பரில் சிங்கண் சோழனான அணுத்திரப் பல்லவரையன் என்பவர் கண்ணாடிப்புத்தூர். அனந்தீஸ்வரமுடையார் கோயிலில் அம்மன் திரிபுவன சுந்தர நாச்சியார்க்கு நாள்தோறும் இருநாழி அரிசி அமுது செய்தருளுவதற்காக நிலம் கொடையாக அளித்தார். அவர் அளித்த கொடை நிலம் இருதூணிக் குறுணி விதைநெல் விதைக்கும் அளவுடையது. நிலத்திற்கு நாற்பாங்கு எல்லைகள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

குடும்பர் என்பது மள்ளர் (பள்ளர்) சமுதாயத்திற்குரிய சிறப்புப் பெயர்களில் வந்துள்ளது. இலக்கிய வழக்கும் உண்டு. இன்றைய தழிழ்நாடு அரசு சாதிப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் குடும்பன் பள்ளர் தலைவன் என்று பொருள் கூறி உள்ளார். தென்குடும்பர் என்ற பெயரால் வடகுடும்பர் என்ற பெயர் வழக்கொன்றும் இருந்ததாக நாம் யூகிக்கலாம். அல்லது தென் திசைக்கு உரியவராக அப்பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். வடகரை - தென்கரை என்பது அமராவதி ஆற்றை மையமாகக் கொண்டு பெயர் வந்திருக்கக் கூடும்.

(தென் குடும்பர் தலைவர் – புலவர் செ. இராசு – கொங்கு ஆய்வுமையம்)                                                                                                                                                                                                                                                                                                             கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர் புராணம் திருநகரப்படலம் - 2 செய்யுள் 12 - ல் மள்ளர்கள் வில்லம்பு, கேடையம் போன்றவற்றை  பயன்படுத்துவதில் திறமையுடையவர்கள் என்று கூறுகிறார்.

  
வில்லம்பு கொண்ட மள்ளர்

        "வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்
         
தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
         
நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
         
தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"

    "
வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள்தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள்நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன


இதேபோல், மள்ளர் குலத்தைச் சேர்ந்தவர் குடும்பர் இருங்கோளன் என்று கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிப்பிடுவதாக நாம் முன்பே பல சான்றுகளை பார்த்தோம். அவன் அரசனாக இருப்பதால் பொழுது போக்கிற்காக வேட்டைத்தொழிலில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஆதலால், இருங்கோவேள் வேட்டைக்காரன் என்ற சிறப்பு பட்டம் பெற்றதாக சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

1.    கி.பி.1281 ஆம் ஆண்டில் சோழர் ஆட்சி வலிமையிழந்து, பாண்டியர் ஜம்பைப் பகுதியைக் கைப்பற்றிய போது அப்பகுதி குறுநிலத் தலைவர்கள், பாண்டியர் மேலாதிக்கத்தை ஏற்றனர். மாறவர்மன் விக்கிரம பாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டு ஜம்பையில் உள்ள ஒரு துண்டுக் கல்வெட்டு நரலோக ஈசுவர முடையார்க்கு அப்பகுதி குறுநிலத் தலைவன் முதலியான  முனயதரையன் வேட்டுவன் ஆளவந்தான் இருங்கோளன் என்பான் திருவமுதுபடிக்குச் செய்த ஏற்பாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது A.R.E. No.436 of 1937 - 38)
  1. "மலையதரையன் வேட்டுவன் ஆளவந்தான் இருங்கோளன் (A.R.E. No.79 of 1922).
  1. "சேந்தமங்கலத்து வேட்டைக்காறன் மாணியான் கலக்கியான கரிகால சோழ இருங்கோளப்பாடி நாடாழ்வாந்" (A.R.E. No. 359 of 1902).
  1. இந்நாட்டுப்புன்னத்துப் பூவாணியவேட்டுவரில் வெளான் கரியானான மருதங்க வெளான். (SII Vol. III ,No. 24, Part I & II,  Page 45)
(வேளான் என்பது வேளாண் சமுகத்து அரசியல் தலைவர்களை குறிக்கும்)

  1. வேட்டைக்காறன் அத்திமல்லன் விளக்கநேன் களமிருதூர்ப் பள்ளி பெருமான் தொண்டநைச் சாத்தி வைத்த விளக்கு" (A.R.E. No. 365 of 1902)

இவ்வாறு மேலே கண்ட தொல்லியல் துறை மற்றும் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி குடும்பன், குடுமி, தென்குடும்பர், குடும்பனார், குடுமர், குடும்பிகள், குடும்பிச்சி, குடிம்பர், தகைமாண் குடுமி, குடுமி கோமான், விறன்மாண் குடுமி, குடும, பூலுவ குடும, மல்லர், மல்லச்சியர், மல்லாரி, மல்லி, மள்ளர், மள்ளன், மள்ளனார், மள்ளியர், மள்ளி, வேட்டைக்காரன், வேட்டுவன் போற்ற பெயர்கள் மள்ளர் இனத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்க்குச் சான்றாக சில கல்வெட்டுகளை காணலாம்.

  1. பல்லடம் பொங்கலூரிலுள்ள கல்வெட்டு “பூலுவ தெங்குடும” என கூறுகிறது. (பூலுவ மரபைச் சார்ந்த தென் குடும்பர்)
  1. தஞ்சை மாவட்டம் திருக்கோடிக்காவல் நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு ஒன்று மல்லன் வேங்கடவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவனுடைய முழுபெயர் வேட்டுவதி அரையன் ஆன மல்லன் வேங்கடவன். இவன் திருக்கோடிக்காவல் சிவன்கோவிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காக 15 கழஞ்சு பொன் கொடையளித்தான் (78 / 12) ( SII Vol. 12, No, No. 78 )
  1. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கல்வெட்டு “அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றியடவர் எழுத்து” என கூறுகிறது.            
( தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை – தொடர் எண். 1223 / 2003)

  1. ஈரோடு மாவட்டம் திங்களூர் கல்வெட்டு “திங்களூரிற் கறைய வேட்டுவந் சமைய மந்திரி” என கூறுகிறது.           
( தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை – தொடர் எண். 1149 / 2003)

இந்த திங்களூரில் வாழ்ந்தவர்கள் அனைவரும் மள்ளர் இனத்தவர் என திங்களூர் செப்பேடு கூறுகிறது. கரையாளர் என்பது கரைய என திரிந்துள்ளது. கரையாளர் என்பது மள்ளர் இனத்தின் ஒரு உட்பிரிவு.

  1. 1982-ம் ஆண்டு சென்னை பலகலைக்கழகம் வெளியிட்டதமிழ் - லெக்சிகன், ஆங்கிலத் தமிழ் அகராதி பக்கம் 346 -ல் பள்ளரின் கிளைச் சாதியாக பட்டினக் கரையார் உள்ளது.
  1. தி. நடராஜன் எழுதிய கட்டபொம்மன் கும்மிப் பாடல்கள் என்ற வரலாற்று நூல் , பக்கம் 8 மற்றும் பக்கம் 82 - 83-ல் பள்ளக் குடும்பன் கரையாளன் பாயம் புலி போல சிங்கங்களும் என்றும், பள்ளக்குடும்பன் கரையாளன் பாதனுக்கு ஒரு கையோலை என்றும் பள்ளரின் உட்பிரிவாக கரையாளரைக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்வை,11/95 மள்ளர் மலர்)
  1. விருதுநகர் மாவட்டம், மானூர் மள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில் "அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, என்ற பள்ளர்களின் பட்டியலில் பட்டனக்கரைப் பள்ளு" என்று பள்ளர் பிரிவில் கரையார் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.
  1. சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை - இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:
"மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
வேணமழை பெய்யும் நாளை காணும் பள்ளீரே"

  1. திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
  1. தமிழ் நாடு அரசு பட்டியல் சாதியில் கடையர் என்ற பள்ளர் இனத்தின் உட்பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இன்றைய நடைமுறையில் வேடன், வேட்டுவன், வேட்டையன் என்ற பெயரில் பள்ளர்கள் இருக்கிறார்கள் என்பதை கீழ்கண்ட சான்றுகள் உறுதி செய்கிறது.

1.   நீலம்பூரில் உள்ள பாண்டிய வம்ச தேவேந்திர குல வேளாளர்களில் பாரம்பரிய உரிமை பெற்ற வேட்டையன் கோயிலில் பூசாரியாக இன்றும் திரு. சுப்பிரமணிய பண்ணாடி அவர்கள் குடும்பத்தவர்களே இருந்துவருகின்றனர்.

2. மல்லாண்டார் கோவில் போன்று வெட்டுவான் கோவில் இன்றும் மள்ளர்களின் குலதெய்வ கோவிலாக உள்ளது. அம்பு விடும் திருவிழா இன்றும் குடும்பர்களால் நடந்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
3.    தமிழ் நாடு அரசு சாதி பட்டியலில் கீழ்கண்ட பள்ளர்களின் உட்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

           வேடன் (SC – 74)
வேட்டுவர் ( SC - 76)
மலை வேடன் (ST – 22)


இவர்களுக்கும் வேட்டுவ கவுண்டர் இன மக்களுக்கும் யாதும் தொடர்பு இல்லை என்பதை தேவேந்திர குல மள்ளர்களின் பழனி முருகன் கோவில் செப்பேடு மற்றும் நந்தம் செப்பேடு தெளிவுபடுத்துகிறது.

பழனிப்பட்டயம் வ.எண் 9  -  வேட்டைப் பள்ளன்
நத்தம் பட்டயம் வ.எண் 12  - வேட்டைப் பள்ளன்

தமிழ் நாடு பட்டியல் இனம் எண் 74 – ல் உள்ள வேடன் என்ற பெயரும், எண். 76 – ல் உள்ள வேட்டுவர் என்ற பெயரும், மற்றும் ழங்குடியினர் ட்டியல் எண் 22 ல் உள்ள மலை வேடன் என்ற பெயரும் பழனிப்பட்டயம் வ.எண் 9 – ல் உள்ள வேட்டைப் பள்ளன் என்ற பெயரும், நத்தம் பட்டயம் வ.எண் 12 – ல் உள்ள வேட்டைப் பள்ளன் என்ற பெயரும், பட்டையங்களின் படி மள்ளர் குலத்தின் உட்பிரிவாகும்.

மேலே கண்ட வரலாற்றுச் சான்று மற்றும் இன்றைய நடைமுறை நிகழ்வுகளில் இருந்து வேடன், வேட்டுவன், வேட்டையன் என்ற பட்டங்கள் மள்ளர் இன மக்களுக்கும் உள்ளது என்பது நிறுபிக்கபடுவதால், வேட்டுவன் ஆளவந்தான் என்ற பட்டங்கொண்ட இருங்கோளர்க்கும் இன்றை வேட்டுவக் கவுண்டர்களுக்கும் யாதும் தொடர்பு இல்லை என்பதை உறுதியாக கூறலாம்.



                                                                                                        (தொடரும்)

Tuesday, 18 October 2016

பகுதி 8 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar


இருங்கோளர், இருக்குவேள், இளங்கோவேளார் என்பது சங்ககால இருங்கோவேண்மானின் பரம்பரையினர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் இவர்கள் புதுக்கோட்டை அருகில் உள்ள கொடும்பாளூர் அரசர்களாக இருந்து கொண்டு சோழ வேந்தர்களுக்கு பெண் கொடுத்தும் பெண்ணை மணம் செய்து கொண்டும் உறவினர்களாக இருந்து உள்ளனர்.


கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் என்பவரின் மகள். கரிகால் வளவன் நாங்கூர் வேள் என்பவரின் மகளை மணந்து கொண்டான். (Thol. Porul S. 30 and its commentary.  டாக்டர். மா. இராசமாணிக்கனார் - சோழர் வரலாறு பக்.68)

ஒய். சுப்பராயலு தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் (The State in Medi eval South India 6001350. 1976 Madurai University) . இருங்கோவேளாளர்களின் கால்வழி பற்றி குறிப்பிட்டுள்ளார். (Appendix - 2, Table - 2 ) அதில் எட்டாவது மன்னனான வீரசோழ இளங்கோவேள் என்ற பட்டம் கொண்டவர், பிராந்தகன் குஞ்சர மல்லன் என்றும் கூறப்படுகிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளாரையில் சம்புநாதசாமி கோயில் முன்னுள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ள மாற்பிடுகு இருங்கோவேளான் சாத்தனின் மாமன், பரசிராமனின் திரு மருமான் பல்லவன் நந்திவர்மன் III காலத்திய ( கி.பி. 9 – ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு ஒன்று இளங்கோவேளார் மல்லர் எனக் கூறுகிறது. நந்திவர்மன் – III இன் தந்தை தந்திவர்மன் ஆவார்.

செல்லிக்கோன் மல்லாவானைப் புகழ்ந்து கூறுகிறது இந்தக் கல்வெட்டு. இந்தச் செல்லிக்கோன் மல்லாவான் பரசிராமனின் மருமகன் என்றும் கூறுகிறது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 12 எண் 48 ஆக கொடுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. எனினும் மல்லாவானின் புகழ்பாடும் பாடலாக இது குறிப்பிடப்படுவது தெரிகிறது. பன்னிரண்டு வரிகள் கொண்ட இதைப்பாடியது பெருங்காவிதி சடையன் பள்ளி எனக் கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டில் செல்லிக்கோன் மல்லனை வேளாளன் அரையர் என்று குறிப்பிடுகிறது. அந்த வேளாளன் செல்லிக்கோன் மல்லனை ஒரு பள்ளி புகழ்ந்து பாடுகிறார்

கல்வெட்டு வாசகம் ( 1 - 2)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ

2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ உதிந

3. ந்திவர்ம(ற்)குய ..............3 றாவது திருவெள்ளறைப

4. ரிடையார் பிரம.............ல்ல(வ) மாம(றை)த் தொன்றி

5. வ(னி)வேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவே(ளா)

6. ன் சாத்தன் செ.........தன் மாமன் பரசிராமன்

7. திருமருமான் பெரு(b).........செல்லிக் கோமான் மல்ல

8. வா(ந்) (தொ)ண்மறவ..........தசூடி (ரா)டி சூடி (மா)மணி

9. வெளாளரையர்தங்...........லை நிரவ(யனந்தந்தி) மங்கை

10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மெலெய்

11. பிரம தெயத்துக்கு (உ)றுதியாந் விழுப்(பெரரையன்சா)

12. த்தன் மற்றவன்(ப்) புகழ்நி(ற்)க்க. இது பாடித்தந்தோந்.

13. பெருங்காவிதி சடையன் பள்ளி.

(தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 12, எண். 48)



சோழ மள்ளர் இராஜகேசரிவர்மன் 2 - ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு வீரசோழ இளங்கோவேளாயின ஒற்றி மதுராந்தகன் என்றும் 3 -ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு உறத்தூர் கூற்றத்து புதுக்குடி அவந்தியகோவப் பல்லவரையன் வீரசோழ இளங்கோவேளாயின பராந்தகன் குஞ்சரமல்லர் என்றும் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ கொவிராசகெசரிபன்மற்கு யா

2. ண்டு 3 -ஆவது உறத்தூர்க் கூற்றத்து புதுக்குடி

3. அவந்தியகொவப் பல்வவரையனாயி(ந) மயிலை தி

4.  ண்டன் உறையூர்க் கூற்றத்து அல்லூர் அல்லூர்நக்கன்கொயி

5.ல் வரகெஸ்வரக்கு தெவதானமாக பண்டு விளைந்தறியாக் களர் அ(பொ)வநமெ.

6. ய் கிடந்த நிலத்தை விரசொழ இளங்கொவெளாயிந பராந்தகன் குஞ்ச

7. ரமல்லாக்கு விண்ணப்பஞ்செய்து திருமுகங்கொண்டு அல்

8. லுார் ஊரார் இடையும் விரநாராயணபுரத்து நகரத்தார் இடை

9. யும் உஉமபூவூ-ஞ் செய்வித்துக்கொண்டும் கல்வி வயக்கி

10. ன திண்டன் வயககலுக் கெல்லே கிழ்பாற்க்கெல்லை பழுவூர்

11. வாய்க்காலுக்கு மெக்கும் தென்பார்க்கெல்லை சங்கரப்பாடியார் தொ

12. ட்டத்து மதிட் கிழக்குவடக்கும் (மெ)ல்பாற்கெல்லே பிண

13. ம்பொகு பெருவழிக்கு கிழக்கும் வடபாற்கெல்லே சந்தி

14. ர(ம)ங்கலத்து நின்றும கிழக்கொடி கிழ்பனங்காட்டுக்

15. கெய் பாய்ந்த வாய்க்காலுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருநா

16. ன்கெல்லே உள்ளகப்பட்ட உண்ணில மொழிவின்றி தெவதான

17. மாகவும் (*) இந்நிலத்தால் நிசதஞ் செல்வதானபடி திருஅமுது

18. ஒன்றுக் கரிசி பத்தெட்டுக்குத்தல சூலநாழியால ஐஞ்ஞாழி

19. யும் நெய்யமுதுங் தயிரமுதுங் கறியமுது மடைக்காயமு

20. துங் கொண்டு உச்சம்பொ(தை)ச் சங்கியில் அமுதுசெவ்

21. வதாகவு(ம்*) இரண்டு திருநொந்தாவிளக்கு மிரவும் பகலு

22. ம் எரிப்பதாகவும(*) இபபடி சந்திராதித்தவல் செல்வ

23. தா(கவு)ம்(*) இது உண்ணில மொழிவின்றி நிர்நில

24. மும் (பு)னசெயயும் மென்செயயும் இஸ்ரீகொயில்ப்

25. (ப)ட்டுடையார்களெய் உழுதுகொணடு இத்திருநொந்தாவிளக்

26. கிரண்டு மித்திருவமுது ஒன்று முட்டாமெய் செலுத்துவாராக வைத்தெ

27. ன் மயிலை திணடனென் இதுக்கு நன்கு (வெ)ணடுவாரடி என் தலை

28. மெலன(*) (தி)ங்கு வெண்டுவார் வழி அறுவார் (*) இது …………….. ரஷை.

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 8, எண் 694, மற்றும் A.R.No. 380 of 1903)

குளத்தூர் தாலுகா, குடுமியாமலை, சிகாநாதசுவாமி கோவிலில் மடப்பள்ளியின் கீழ் புறம் சுவரிலுள்ள கல்வெட்டு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கோவேளான்  என்பவர் கீழ்மணநல்லூரில் உள்ள தன்  வேளாண் நிலத்தை கொடையாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.  அக்காலத்தில் சதுர்வேதி மங்களத்தில் வாழ்ந்தவர்கள் பிராமணர்கள் என்பதும், நல்லூரில் வாழ்ந்தவர்கள் வேளாண் சமூகத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டு வாசகம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சொழ நாடுகொண்ட சுந்தர (பாண்)டிய் தெவற்கு யாண்டு ௪ வது
2.இத்திருக்கொயிலில் இரண்டாம் பிராகாரத்து திருவா ...ல் இடஞ்சலாயிருக்கையாலெ ஆற்றூருடையா
3.ன் பொன்னகாங்கையராயர் இது வாங்கி திருமாளிகையும் திருவாயிலும் பெருக்கச்செய்ய இதில் கல்வெட்டு
4.படியெடுத்து படி எடுத்தபடியெ வெட்டுகவென்று உடையார் காங்கையராயர் அருளிச்செய்ய வெட்டினபடியாவது கொ
5.ப்பிரகெசரிபன்மற்கு யாண்டு ௩௰௩ வது திருநலக்குன்றத்து வரமெசு ரற்கு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ
6.வெளானென் ஈழமெறியப்பெரகின்றெந் கீழ்மணநல்லூரில் குடுத்த நிலம் வெலிச்செய்யும் திருவின்தினைசெபமனா
7.யொகியர்க்கும் திருவமுதுக்குமாக இன்நிலஞ்செய்துகுடுத்தென் பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ(வெளா)
8.  னென் இது பன்மாஹெஸ்வர ரஷை.
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 255)



கோ நாட்டுக் கொடும்பாளூர் வீரசோழ இளங்கோ வேளான் மகன் ஆதிச்சபிடாரன் என்பவன் கோவிந்தபாடியில் இருந்த மடம் ஒன்றுக்கு கொடைகள் கொடுத்திருக்கிறான். அச்செய்தி தமிழ் மற்றும் சமஸ்கிரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
                 


No. 33.
(A.R. No. 306 of 1906.)
On the south wall of the central shrine, ruined Vishnu temple in the same village


This is a record of Rajaraja I. It consists of two portions, a Sanskrit verse and a Tamil prose passage recording the same grant, viz., a gift of 30 Suvarnas (gold coins-kalanju ?) by Aditya for feeding a Brahmana in a matha at Govindapadi. In the Tamil portion his name and family are detailed as Madhurantakan Achchapidaran, the son of Virasola Ilangovelar for Kodumbalur in Konadu. The donor was evidently a later member of the dynasty of Kodumbalur chiefs who were connected by ties of marriage with the Chola kings, and some of whom played an important part in the military campaigns of Rajaraja’s predecessors against Ceylon and the Pandyas (S. I. I. V, No. 980 and M. E. R. 1908, paras 84-91).


 கல்வெட்டு வாசகம்: (தமிழ் பகுதி)

1.ஸ்ரீ கொவி ராஜகெசரி பந்மர்க்கு யாண்டு ௩ -  ஆவது

2.கொ நாட்டுக் கொடும்பாளுர் வீரசொழ இளங்கொ வெளான் ம

3.கன் மதுராந்தகன் ஆதிச்சபிடாரந் தாமர்கொட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ

4.கொவிஞ்சபாடி மடத்தில் உண்ண வ

 (தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 13, எண் 33, மற்றும் A.R.No. 306 of 1906)




புதுக்கோட்டை மாவட்டம் கோனாட்டுக் கொடும்பாளூரில் சிற்றரசர்களாக ஆட்சி செய்து வந்த இருங்கோவேளிர் வம்சத்தினர் சோழ அரசர்களுடன் மண உரவு கொண்டவர்கள். அதனால் இவ் வம்சத்தினர் சோழர்கள் போன்று ஆண்கள் குஞ்சர மல்லன் என்றும் பெண்டிர் குஞ்சர மல்லி என்றும் அழைத்துக்கொண்டர் என்பது கல்வெட்டுகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜராஜனுடைய தந்தையாகிய சுந்தரசோழன் (வீரசோழன்) காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய அரசியல் தலைவர்களுக்கு சுந்தர சோழனால், வீரசோழன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு வீரசோழன் குஞ்சர மல்லன் எனப் பெயர் பெற்று விளங்கியவர்கள் பலர் ஆவார். அதேபோல் இராசகேசரி வர்மன் 14 -ஆம் ஆண்டு கல்வெட்டு சிறியவேளானாகிய பராந்தக இருங்கோளன் மகள் குஞ்சர மல்லி என குறிப்பிடுகிறது.


No. 246.
(A.R. No. 299 of 1908.)
Tirukkalittattai, Kumbakonam Taluk, Tanjore District.
On the south wall of the central shrine, Vedapurisvara temple.

This registers an endowment of 25 ilakkasu each for two perpetual lamps in the temple of Tirukkudittittai-Perumal at Amaninarayana-chaturvedimangalam by Rajadichchi and Kunjaramalli, the wife and daughter respectively of Siriyavelan.  Thechief is evidently identical with Parantakan Siriyavelar, the commander of the Chola king Parantaka Sundara-Chola.

Text.
Published in South Indian Inscriptions. Vol. III, No. 122.

கல்வெட்டு வாசகம்:

1.ஸ்வஸ்திஸ்ரீ கொ இராசகெசரிபன்மற்கியாண்டு ௰௪ ஆவது (வ)டகரை தெவதான …யம் அமநிநாராயணச்சது வெதிமங்கலத்து தி(ரு)(க்*)குடித்(திட்)டை பெருமாளுக்கு சிறியவெளான் தெவி(ய்) இராசாதிச்சி ஒரு நொந்தா விளக்கு சக்தி.

2.ராதிச்சவற் எரிய வைய்த்த ஈழ(க்*) காசு உ௰௫ இருப(த்)தஞ்சு சிறியவெளான் மகள் குஞ்சிரமல்லி(ய்) ஒரு நொந்தாவிளக்கு (ச)ந்திராதிச்சவற் எரிய வையத்த ஈழக்காசு உ௰௫ ஆக (௫)௰ கா

3.(சு)ம் குடுத்து கொண்ட பூமி யமங்குடி(ய்) ஊரின் மெல்பக்கத்து ஆலிக்கொன்றை சிரிதர…………..

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 3, எண் 122)



குளத்தூர் தாலுகா, குடுமியாமலை, மேலக்கோவிலில், குடபோக கோவிலின் தென்புறம் சுவரிலுள்ள சாஸனம்

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ கோவி(ரா)  ச கே

2. சரி பன்ம (ர்) க்கு யாண்டு

3. ஆவது இவ்வாண்டு

4. உடையார் மஹிமாலை

5. இருக்கு வெளார் கு

6. திரை அம்மந・・・・(உ  )

7. தையன் திருலக் கு

8. ன்றத்துப் பரமே

9. ஸ்(வ)ர்க் சிறுகாட்டி

10. ச் சந்தி பாலாடி அருள

11. வும் ஒரு போதை யி…

12. கொண்டு மூன்று சந்

13. தியும் பாலமிருது

14. க்கும் இளய மிருது

15. க்கும் ஆக வைச்ச ப

16. சு முப்பத் தொன்று இ

17. து பன்.. (ஹ) ஹே

18. ஸ்வர ராஷை.

(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 22)



திருமயம் தாலுகா சித்தூர் திருவ…..வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு பராந்தகன் வீரசொழனான மஹிமாலைய இருக்கு வேளார் என்பவர் மூவேலி நிலம் கோவிலுக்கு கொடுத்த கொடைபற்றி குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்:

1.  ஸ்வஸ்திஸ்ரீ கோவி(ரா)  ச கே

2.  ஸ்ரீர்ற்க்கு யாண்டு ௪ ஆவது

3.கூடலூர் நாட்டு ………………….. பரமேஸ்வரற்கு பராந்தகன் வீரசொழனான மஹிமாலைய இருக்கு வேளார்…… …… …

4. ……. மங்கலம் …….. வேலி விலம் மூவேலியும்  நிவே…(ம்) மடைக்க வென்று ஸ்வஸ்திஸ்ரீ  குலராஜனானே கூடலூர்

5.   ….. நடைக்கு இதில் புஞ்செய்கள் தி….

(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 24)


மேற்கண்ட  அதே திருமயம் தாலுகா சித்தூர் திருவ…..வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு இராசசிங்கன் உத்தம சீலனான மும்முடிச்சோழ இருக்கு வேளான் என்பவர்  கோவிலுக்கு நிலம் கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரை பராந்தகந் குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன் என்றும் குறிப்பிடுகிறது.


கல்வெட்டு வாசகம்:

1.    ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜ (ரா)கேஸரின்ற்(க்)கு

2.    யாண்டு  ஏழாவது கூடலூர் நாட்டு …………………..

3.    யம் சிற்றையூர் திரு……………….

4.    ஸ்வரற்(க்)கு இராசிங்கன் உத்தம சீலனான மும்முடிச்சோ

5.    இருக்கு வேளாநேன் நான் கொடும்பாளூர் ………. சேந்து உ

6.    த்தரம……………………… ஸ்ரீ சிற்றையூர் தி

7.    ருவகிஸ்வரத்து மஹாதேவர்க்கு தேவதான

8.    மாக அட்டிக்குடுத்த நியம் இவ்வூர்ப்பால் கடை

9.    வயலை உத்தமசிலமங்கலம் மென்று

10. நம்பேரால் இது தன்னெல்லையில் அகப்

11. பட்ட நிலம் எப்பேர்ப்பட்டதும் உடு

12. ம்போடி ஆமை தவழ்ந்தது எப்பேர்பட்டது

13. தேவதாமாக நிலம் அட்டிக்குடுத்து (நா)டாக நி

14. யம் செய்கின்ற பராந்தகந் குஞ்சிமல்லனான இ

15. ராசிங்க பல்லவரைனே. … …

16. விச்சுக் கு

17. டுத்தேன்

18. இராசிங்கந்

19. உத்தம

20. சீலனான

21. மும்முடி

22. சோழ இரு

23. க்கு வேளா

24. னேன்

25. து பன்

26. மாஹே

27. ஸ்வர ர

28. ஷை.

(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 26)




குளத்தூர் தாலுகா, நீர்ப்பழனி, வளர்மதீஸ்வரர் கோவிலில் மிகோவிலின் வடபுறம் சுவரிலுள்ள சாஸம்  மஹிமா லையிருக்கு வேளாயின பிராந்தகன் வீர சோழன் தன் வேளாண் நிலத்தை கோவிலுக்கு கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.  

கல்வெட்டு வாசகம்:


1.ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பந்மற்கு யாண்டு ௰ - ஆவது உறத்தூர்க்கூற் றத்து நீர்ப்பழனி மஹாதேவர்க்கு இவ் வாண்டு …. நாயற்று உத்

2.திரட்டாதி நான்று பற்றின …….. ணததில் மஹிமாலைய இருக்கு வேளாயின பிராந்தகன் வீர சோழனேன் திருப்பராய்த் (துறை) ஸ்ரீகோயிலி

3.லிருந்து உதகவிபூவஞ்செய்து குடுத்த நிலம் நீர்ப்பழனி வயலில் மிறங்கி வயக்கல் பாஞ்சாடி கய்யத்துச்செய்யும் (நாவற்)...க்கா

4.செய்யுந் தடி மூன்று சிறுப்புளியஞ்செய் இடைவாய்க்காற் செய்யும்முவ நெடுங்கண்ணும் உள்ளிட்ட நி(ல….இவ. …)

5.ந் (தே) வதானம் நீர்ப்பழனி வயலில் ளு…. உ கலிதாங்கி மங்கலம் க . வேலியும் கற்குடிநிலன் னே (லியும் பாண்….) …. நி

6......... ஆக நிலன் ருளு…. இது நிமந்த மடைத்தபடி அ…னாபோகம் நீர்ப் பழனிவயலில் ……….. இவ்வூர் மெழுக்குத் (துடவல் திருவலகு)

7.ப்புறம் கற்குடியில்ப் புது(க்கு)ப்புறம் சளு …க உ வச்சப்புறம் பாண்டியே ரிளு நீர்ப்பழனிவயலிற் திருப்பள்ளித் தாமம பறித்துத் தொடுப்

8.பாளுக்கு வ திருநந்தவனம் இறை (த்துச்) சேகண்டிகை கொட்டுவானுக்கு இவ்வூர் வக ஆக நிலன் ௩ளு நீக்கி நிலன் ….யல எம்பெரு

9.மானுக்குத் திருவமுது நிசதி ...ரு வஸ்திக்கு அரிசி ….ப்படி  நெய்…. போது ஒரு பிடியும் கறி . போது க…..தயிற் ……… ……….. ………..  இரவும் ப

10.கலு நொந்தா விளக்கு க சந் (தன) …ரரியும் முன்முறை தேவதான நீர் பாயப் பெறுவதாகவும் இல்ல விளாகம் சேந்தன் கொற்

11.றன் மீயூர் விளாகம் க மழவகுழி ஆத்தியோடு புன்செவக இப்படி பட்டு டையார்கள் சந்தெராதித்தவற செலுத்துவதாகவும் (புர) விற் சு(ருக்)

12.கி யிறையிலிழித்து குடிநீக்கித்தேவதானஞ்செய்து குடுத்தேன் மஹிமா லையிருக்கு வேளாயின பிராந்தகன் வீர சோழநேன் (உடை)

13.(ய)ராருளிச் (செ) ய்யக்கல்மேல் வெட்டுவித்தோம் ஸ்வஸ்திஸ்ரீ குலராஜனுமாண விண்ணவனும் இது பன்மாஹேஸ்வர ரஷை.

(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 30)



ஆதித்த கரிகாலனின் 2 - ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு தென்கரை பிரமதேயம் நந்திபன்ம மங்கலத்து திருக்கற்குடி பரமேசுவரர்க்கு இருங்கோளக் கோனாயின புகழ் விப்பிரகண்டன் அவனிவ(ம)ல்லன் ஒரு நந்தா விளக்குக்கு ஆடு கொடுத்தார் என்று குறிப்பிடுகிறது.


கல்வெட்டு வாசகம்:

1.விரபாண்டியனைத் தலைகொ

2.ண்ட கொப்பரகெசரிபந்மற்க்கு

3.யாண்டு உ ஆவது தெங்கரை

4.பிரமதெயம் நந்திபந்மங்கல

5.த்து திருக்கற்குடி பரமெஸ்வர

6.ற்க்கு இருங்கொளக்கொனா

7.ந புகழ்விப்பிரகண்டந் அவ

8.நி வல்லந் சந்திராகித்தவல்

9.எரிய வைத்த திருநொந்தாவி

10.ளக்கு ஒன்றிநுக்கு வைத்த சா

11.வாமுவாப் பெராடு தொண்

12.ணுாறு (*) தொண்ணூறுங் கொ

13.ண்டு சூலவுழக்கால் நிசதம்

14.உழக்கு நெ(ய்*) கொண்டு விளக்

15.கெரிப்பொமா(ந்)னொம் தெவ

16.ர் கந்மிகளொ(ம்) இது

17.பந்மாஹெசுர ரச்சை

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 3, எண் 199)





இதேபோல் கி.பி.962 ஆம் ஆண்டு சுந்தர சோழனின் கல்வெட்டில் இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்  என்று குறிப்பிடப்படுகிறார்கள்


கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு ஒன்று இருங்கோளன் நாரணன் பிரித்திவிபதியார் என்பவரை பற்றி குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது மகள் வானவன் மாதேவியார் ஆவார்.  இவள் உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாகும். இவ் வேளிர் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலமான கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டில் இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன் என்று குறிப்பிடப்படுகிறது.



கி.பி.1014 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டில் இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன் என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லனின் புதல்வன் என ஆராச்சியாலர்கள் கருதுகின்றனர்.



கி.பி.1050 - ஆம் ஆண்டு ராஜாதிராஜ சோழனின் விருத்தாசலம் கல்வெட்டு விசையைபுரக் கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன் என்பவர் பற்றி குறிப்பிடுகிறது.


கி.பி.1130 - ஆம் ஆண்டு திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் விக்கிரம சோழனின் கல்வெட்டு பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன் என்ற வேளிர் அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.



புறநானூறில் 76, 77, 78, மற்றும் 79 பாடல்கள் இடைக்குன்றூர் கிழார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி பாடியவையாகும். அதில் பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவனிடம் தோல்விபெற்ற ஏழு மன்னர்களைப்பற்றி குறிப்பிடுகிறார். பாண்டியனை மள்ளர் என்றும், அவனிடம் வம்பு செய்து போருக்கு வந்த எழுவரை வம்ப மள்ளர் என்று இடைக்குன்றூர் கிழார் தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த வம்ப மள்ளர் எழுவர் சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், பொலம்பூண் எழினி, எருமை யூரன், இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன் என்று அகநானுறு பாடல் 36 குறிப்பிடுகிறது.


உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழக்
                                                              (புறம். 77 - 9 -11)

பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
                                                               (புறம். 78 - 6 -8)


வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.
                                                          (புறம். 79 - 4 -6)


சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
                                                      (அகம். 36 – 15 - 20)




மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் இலக்கிய சான்றுகளிலிருந்து இருங்கோவேள் வம்சத்தவர்கள் மள்ளர் குலத்தவர் என்பது உறுதியாகிறது.


                                                                                                                        (தொடரும்)