இருங்கோளர், இருக்குவேள்,
இளங்கோவேளார் என்பது சங்ககால இருங்கோவேண்மானின்
பரம்பரையினர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் இவர்கள்
புதுக்கோட்டை அருகில் உள்ள கொடும்பாளூர் அரசர்களாக இருந்து கொண்டு சோழ
வேந்தர்களுக்கு பெண் கொடுத்தும் பெண்ணை மணம் செய்து கொண்டும் உறவினர்களாக இருந்து
உள்ளனர்.
கரிகால் வளவன் தந்தை
இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் என்பவரின் மகள். கரிகால் வளவன் நாங்கூர் வேள் என்பவரின் மகளை மணந்து
கொண்டான். (Thol. Porul S. 30 and its
commentary. டாக்டர். மா.
இராசமாணிக்கனார் - சோழர் வரலாறு பக்.68)
ஒய்.
சுப்பராயலு தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் (The State in Medi eval South India
6001350. 1976 Madurai University) . இருங்கோவேளாளர்களின் கால்வழி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
(Appendix - 2, Table - 2 ) அதில்
எட்டாவது மன்னனான வீரசோழ இளங்கோவேள் என்ற பட்டம் கொண்டவர், பிராந்தகன் குஞ்சர மல்லன் என்றும் கூறப்படுகிறார்.
திருச்சிராப்பள்ளி
மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளாரையில் சம்புநாதசாமி கோயில் முன்னுள்ள ஒரு பாறையில்
வெட்டப்பட்டுள்ள மாற்பிடுகு இருங்கோவேளான் சாத்தனின் மாமன்,
பரசிராமனின் திரு மருமான் பல்லவன் நந்திவர்மன் III காலத்திய ( கி.பி. 9 – ஆம் நூற்றாண்டு)
கல்வெட்டு ஒன்று இளங்கோவேளார் மல்லர் எனக் கூறுகிறது.
நந்திவர்மன் – III இன் தந்தை தந்திவர்மன் ஆவார்.
செல்லிக்கோன்
மல்லாவானைப் புகழ்ந்து கூறுகிறது இந்தக் கல்வெட்டு. இந்தச் செல்லிக்கோன் மல்லாவான்
பரசிராமனின் மருமகன் என்றும் கூறுகிறது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 12 எண்
48 ஆக கொடுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. எனினும் மல்லாவானின் புகழ்பாடும்
பாடலாக இது குறிப்பிடப்படுவது தெரிகிறது. பன்னிரண்டு வரிகள் கொண்ட இதைப்பாடியது பெருங்காவிதி
சடையன் பள்ளி எனக் கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டில் செல்லிக்கோன்
மல்லனை வேளாளன் அரையர் என்று குறிப்பிடுகிறது. அந்த வேளாளன் செல்லிக்கோன் மல்லனை ஒரு பள்ளி புகழ்ந்து பாடுகிறார்
கல்வெட்டு
வாசகம் ( 1 - 2)
1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ
2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ உதிந
3. ந்திவர்ம(ற்)குய ..............3 றாவது திருவெள்ளறைப
4. ரிடையார் பிரம.............ல்ல(வ) மாம(றை)த் தொன்றி
5. வ(னி)வேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவே(ளா)
6. ன் சாத்தன் செ.........தன் மாமன்
பரசிராமன்
7. திருமருமான் பெரு(b).........செல்லிக் கோமான் மல்ல
8. வா(ந்) (தொ)ண்மறவ..........தசூடி
(ரா)டி சூடி (மா)மணி
9. வெளாளரையர்தங்...........லை
நிரவ(யனந்தந்தி) மங்கை
10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மெலெய்
11. பிரம தெயத்துக்கு (உ)றுதியாந் விழுப்(பெரரையன்சா)
12. த்தன் மற்றவன்(ப்) புகழ்நி(ற்)க்க. இது பாடித்தந்தோந்.
13. பெருங்காவிதி சடையன் பள்ளி.
(தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 12, எண். 48)
சோழ மள்ளர் இராஜகேசரிவர்மன்
2 - ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு வீரசோழ இளங்கோவேளாயின ஒற்றி மதுராந்தகன் என்றும் 3
-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு உறத்தூர் கூற்றத்து புதுக்குடி அவந்தியகோவப் பல்லவரையன்
வீரசோழ இளங்கோவேளாயின பராந்தகன் குஞ்சரமல்லர் என்றும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ கொவிராசகெசரிபன்மற்கு யா
2. ண்டு 3 -ஆவது உறத்தூர்க் கூற்றத்து புதுக்குடி
3. அவந்தியகொவப் பல்வவரையனாயி(ந) மயிலை தி
4. ண்டன் உறையூர்க்
கூற்றத்து அல்லூர் அல்லூர்நக்கன்கொயி
5.ல் வரகெஸ்வரக்கு தெவதானமாக
பண்டு விளைந்தறியாக் களர் அ(பொ)வநமெ.
6. ய் கிடந்த நிலத்தை விரசொழ இளங்கொவெளாயிந
பராந்தகன் குஞ்ச
7. ரமல்லாக்கு விண்ணப்பஞ்செய்து திருமுகங்கொண்டு
அல்
8. லுார் ஊரார் இடையும்
விரநாராயணபுரத்து நகரத்தார் இடை
9. யும் உஉமபூவூ-ஞ்
செய்வித்துக்கொண்டும் கல்வி வயக்கி
10. ன திண்டன் வயககலுக் கெல்லே கிழ்பாற்க்கெல்லை
பழுவூர்
11. வாய்க்காலுக்கு மெக்கும் தென்பார்க்கெல்லை
சங்கரப்பாடியார் தொ
12. ட்டத்து மதிட் கிழக்குவடக்கும்
(மெ)ல்பாற்கெல்லே பிண
13. ம்பொகு பெருவழிக்கு கிழக்கும்
வடபாற்கெல்லே சந்தி
14. ர(ம)ங்கலத்து நின்றும கிழக்கொடி கிழ்பனங்காட்டுக்
15. கெய் பாய்ந்த வாய்க்காலுக்கு
தெற்கும் இவ்விசைத்த பெருநா
16. ன்கெல்லே உள்ளகப்பட்ட உண்ணில
மொழிவின்றி தெவதான
17. மாகவும் (*) இந்நிலத்தால் நிசதஞ் செல்வதானபடி
திருஅமுது
18. ஒன்றுக் கரிசி பத்தெட்டுக்குத்தல சூலநாழியால ஐஞ்ஞாழி
19. யும் நெய்யமுதுங் தயிரமுதுங்
கறியமுது மடைக்காயமு
20. துங் கொண்டு உச்சம்பொ(தை)ச்
சங்கியில் அமுதுசெவ்
21. வதாகவு(ம்*) இரண்டு
திருநொந்தாவிளக்கு மிரவும் பகலு
22. ம் எரிப்பதாகவும(*) இபபடி சந்திராதித்தவல்
செல்வ
23. தா(கவு)ம்(*) இது உண்ணில மொழிவின்றி
நிர்நில
24. மும் (பு)னசெயயும் மென்செயயும் இஸ்ரீகொயில்ப்
25. (ப)ட்டுடையார்களெய் உழுதுகொணடு
இத்திருநொந்தாவிளக்
26. கிரண்டு மித்திருவமுது ஒன்று முட்டாமெய்
செலுத்துவாராக வைத்தெ
27. ன் மயிலை திணடனென் இதுக்கு நன்கு
(வெ)ணடுவாரடி என் தலை
28. மெலன(*) (தி)ங்கு வெண்டுவார் வழி
அறுவார் (*) இது …………….. ரஷை.
(தென்னிந்தியக்
கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 8, எண் 694, மற்றும் A.R.No. 380 of 1903)
குளத்தூர்
தாலுகா, குடுமியாமலை, சிகாநாதசுவாமி கோவிலில் மடப்பள்ளியின் கீழ் புறம் சுவரிலுள்ள கல்வெட்டு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கோவேளான் என்பவர் கீழ்மணநல்லூரில் உள்ள தன் வேளாண் நிலத்தை கொடையாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் சதுர்வேதி மங்களத்தில் வாழ்ந்தவர்கள் பிராமணர்கள் என்பதும், நல்லூரில் வாழ்ந்தவர்கள் வேளாண் சமூகத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டு வாசகம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சொழ நாடுகொண்ட
சுந்தர (பாண்)டிய்
தெவற்கு யாண்டு ௪ வது
2.இத்திருக்கொயிலில் இரண்டாம் பிராகாரத்து திருவா ...ல் இடஞ்சலாயிருக்கையாலெ ஆற்றூருடையா
3.ன் பொன்னகாங்கையராயர் இது வாங்கி திருமாளிகையும்
திருவாயிலும் பெருக்கச்செய்ய இதில் கல்வெட்டு
4.படியெடுத்து படி எடுத்தபடியெ வெட்டுகவென்று உடையார்
காங்கையராயர் அருளிச்செய்ய வெட்டினபடியாவது கொ
5.ப்பிரகெசரிபன்மற்கு யாண்டு ௩௰௩ வது திருநலக்குன்றத்து
வரமெசு ரற்கு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ
6.வெளானென் ஈழமெறியப்பெரகின்றெந்
கீழ்மணநல்லூரில் குடுத்த நிலம் வெலிச்செய்யும் திருவின்தினைசெபமனா
7.யொகியர்க்கும் திருவமுதுக்குமாக இன்நிலஞ்செய்துகுடுத்தென்
பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ(வெளா)
8. னென் இது
பன்மாஹெஸ்வர ரஷை.
(புதுக்கோட்டை
மாவட்டக் கல்வெட்டுகள் எண். 255)
கோ நாட்டுக் கொடும்பாளூர் வீரசோழ இளங்கோ
வேளான் மகன் ஆதிச்சபிடாரன் என்பவன் கோவிந்தபாடியில் இருந்த மடம் ஒன்றுக்கு கொடைகள்
கொடுத்திருக்கிறான். அச்செய்தி தமிழ் மற்றும் சமஸ்கிரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
No.
33.
(A.R.
No. 306 of 1906.)
On the
south wall of the central shrine, ruined Vishnu temple in the same village
This is a
record of Rajaraja I. It consists of two portions, a Sanskrit verse and a Tamil
prose passage recording the same grant, viz., a gift of 30 Suvarnas (gold
coins-kalanju ?) by Aditya for feeding a Brahmana in a matha at Govindapadi. In
the Tamil portion his name and family are detailed as Madhurantakan
Achchapidaran, the son of Virasola Ilangovelar for Kodumbalur in Konadu. The
donor was evidently a later member of the dynasty of Kodumbalur chiefs who were
connected by ties of marriage with the Chola kings, and some of whom played an
important part in the military campaigns of Rajaraja’s predecessors against
Ceylon and the Pandyas (S. I. I. V, No. 980 and M. E. R. 1908, paras 84-91).
கல்வெட்டு வாசகம்: (தமிழ் பகுதி)
1.ஸ்ரீ கொவி ராஜகெசரி
பந்மர்க்கு யாண்டு ௩ - ஆவது
2.கொ
நாட்டுக் கொடும்பாளுர் வீரசொழ இளங்கொ வெளான் ம
3.கன்
மதுராந்தகன் ஆதிச்சபிடாரந் தாமர்கொட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ
4.கொவிஞ்சபாடி மடத்தில்
உண்ண வ
(தென்னிந்தியக்
கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 13, எண் 33, மற்றும் A.R.No. 306 of 1906)
புதுக்கோட்டை மாவட்டம் கோனாட்டுக் கொடும்பாளூரில் சிற்றரசர்களாக ஆட்சி செய்து
வந்த இருங்கோவேளிர் வம்சத்தினர் சோழ அரசர்களுடன் மண உரவு கொண்டவர்கள். அதனால் இவ்
வம்சத்தினர் சோழர்கள் போன்று ஆண்கள் குஞ்சர மல்லன் என்றும் பெண்டிர் குஞ்சர மல்லி
என்றும் அழைத்துக்கொண்டர் என்பது கல்வெட்டுகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜராஜனுடைய தந்தையாகிய சுந்தரசோழன் (வீரசோழன்) காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய
அரசியல் தலைவர்களுக்கு சுந்தர சோழனால், வீரசோழன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு வீரசோழன் குஞ்சர
மல்லன் எனப் பெயர் பெற்று விளங்கியவர்கள் பலர் ஆவார். அதேபோல் இராசகேசரி வர்மன் 14
-ஆம் ஆண்டு கல்வெட்டு
சிறியவேளானாகிய பராந்தக இருங்கோளன் மகள் குஞ்சர மல்லி என குறிப்பிடுகிறது.
No. 246.
(A.R. No. 299 of 1908.)
Tirukkalittattai,
Kumbakonam Taluk, Tanjore District.
On the south wall of the
central shrine, Vedapurisvara temple.
This registers an
endowment of 25 ilakkasu each for two perpetual lamps in the temple of
Tirukkudittittai-Perumal at Amaninarayana-chaturvedimangalam by Rajadichchi and Kunjaramalli, the
wife and daughter respectively of Siriyavelan. Thechief is evidently
identical with Parantakan Siriyavelar, the commander of the Chola king
Parantaka Sundara-Chola.
Text.
Published in South Indian Inscriptions. Vol. III, No. 122.
கல்வெட்டு வாசகம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ கொ இராசகெசரிபன்மற்கியாண்டு ௰௪ ஆவது (வ)டகரை தெவதான …யம்
அமநிநாராயணச்சது வெதிமங்கலத்து தி(ரு)(க்*)குடித்(திட்)டை பெருமாளுக்கு
சிறியவெளான் தெவி(ய்) இராசாதிச்சி ஒரு நொந்தா விளக்கு சக்தி.
2.ராதிச்சவற் எரிய வைய்த்த ஈழ(க்*) காசு உ௰௫ இருப(த்)தஞ்சு சிறியவெளான் மகள்
குஞ்சிரமல்லி(ய்)
ஒரு நொந்தாவிளக்கு (ச)ந்திராதிச்சவற் எரிய வையத்த ஈழக்காசு உ௰௫ ஆக (௫)௰ கா
3.(சு)ம் குடுத்து கொண்ட பூமி யமங்குடி(ய்) ஊரின் மெல்பக்கத்து
ஆலிக்கொன்றை சிரிதர…………..
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 3, எண் 122)
குளத்தூர்
தாலுகா, குடுமியாமலை, மேலக்கோவிலில், குடபோக
கோவிலின் தென்புறம் சுவரிலுள்ள சாஸனம்
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ
கோவி(ரா)
ச கே
2. சரி
பன்ம (ர்) க்கு யாண்டு
3. ௩ ஆவது இவ்வாண்டு
4. உடையார்
மஹிமாலை
5. ய இருக்கு
வெளார் கு
6. திரை அம்மந・・・・(உ )
7. தையன் திருநலக் கு
8. ன்றத்துப்
பரமே
9. ஸ்(வ)ர்க் சிறுகாட்டி
10. ச்
சந்தி பாலாடி அருள
11. வும்
ஒரு போதை யி…
12. கொண்டு
மூன்று சந்
13. தியும்
பாலமிருது
14. க்கும்
இளய மிருது
15. க்கும்
ஆக வைச்ச ப
16. சு
முப்பத் தொன்று இ
17. து பன்.. (ஹ) ஹே
18. ஸ்வர ராஷை.
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண்.
22)
திருமயம் தாலுகா சித்தூர் திருவ…..வரர்
கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு பராந்தகன் வீரசொழனான மஹிமாலைய இருக்கு வேளார் என்பவர் மூவேலி நிலம் கோவிலுக்கு கொடுத்த கொடைபற்றி குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ
கோவி(ரா) ச கே
2. ஸ்ரீ பர்மற்க்கு யாண்டு ௪ ஆவது
3.கூடலூர் நாட்டு ………………….. பரமேஸ்வரற்கு பராந்தகன் வீரசொழனான மஹிமாலைய இருக்கு வேளார்…… …… …
4. ……. மங்கலம் …….. வேலி
விலம் மூவேலியும் நிவே…(ம்) மடைக்க வென்று
ஸ்வஸ்திஸ்ரீ குலராஜனானே
கூடலூர்
5. ….. நடைக்கு இதில் புஞ்செய்கள்
தி….
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண்.
24)
மேற்கண்ட அதே திருமயம் தாலுகா
சித்தூர் திருவ…..வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு இராசசிங்கன் உத்தம
சீலனான மும்முடிச்சோழ இருக்கு வேளான் என்பவர்
கோவிலுக்கு நிலம் கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரை
பராந்தகந் குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன் என்றும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜ (ரா)ஜ கேஸரி பன்மற்(க்)கு
2. யாண்டு ஏழாவது கூடலூர் நாட்டு …………………..
3. யம்
சிற்றையூர் திரு……………….
4. ஸ்வரற்(க்)கு
இராசிங்கன் உத்தம சீலனான மும்முடிச்சோ
5. ழ இருக்கு வேளாநேன் நான் கொடும்பாளூர் ………. சேந்து உ
6. த்தரம……………………… ஸ்ரீ சிற்றையூர் தி
7. ருவகிஸ்வரத்து
மஹாதேவர்க்கு தேவதான
8. மாக
அட்டிக்குடுத்த நியம் இவ்வூர்ப்பால் கடை
9. யவயலை உத்தமசிலமங்கலம் மென்று
10. நம்பேரால் இது தன்னெல்லையில் அகப்
11. பட்ட நிலம் எப்பேர்ப்பட்டதும் உடு
12. ம்போடி ஆமை தவழ்ந்தது எப்பேர்பட்டது
13. ம தேவதாநமாக நிலம் அட்டிக்குடுத்து
(நா)டாக நி
14. யம் செய்கின்ற பராந்தகந் குஞ்சிரமல்லனான இ
15. ராசிங்க பல்லவரைனே…. … …
16. விச்சுக் கு
17. டுத்தேன்
18. இராசிங்கந்
19. உத்தம
20. சீலனான
21. மும்முடி
22. சோழ இரு
23. க்கு வேளா
24. னேன் இ
25. து பன்
26. மாஹே
27. ஸ்வர ர
28. ஷை.
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண்.
26)
குளத்தூர்
தாலுகா, நீர்ப்பழனி, வளர்மதீஸ்வரர் கோவிலில் …மிகோவிலின் வடபுறம் சுவரிலுள்ள சாஸநம் மஹிமா லையிருக்கு வேளாயின பிராந்தகன் வீர சோழன் தன் வேளாண் நிலத்தை கோவிலுக்கு கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பந்மற்கு யாண்டு ௰ - ஆவது உறத்தூர்க்கூற் றத்து
நீர்ப்பழனி மஹாதேவர்க்கு இவ் வாண்டு …. நாயற்று உத்
2.திரட்டாதி நான்று பற்றின …….. ணததில் மஹிமாலைய இருக்கு வேளாயின பிராந்தகன் வீர சோழனேன்
திருப்பராய்த் (துறை) ஸ்ரீகோயிலி
3.லிருந்து உதகவிபூவஞ்செய்து குடுத்த நிலம் நீர்ப்பழனி
வயலில் மிறங்கி வயக்கல் பாஞ்சாடி கய்யத்துச்செய்யும் (நாவற்)...க்கா
4.செய்யுந் தடி மூன்று சிறுப்புளியஞ்செய் இடைவாய்க்காற்
செய்யும்முவ நெடுங்கண்ணும் உள்ளிட்ட நி(ல….இவ. …)
5.ந் (தே) வதானம் நீர்ப்பழனி வயலில் ளு…. உ கலிதாங்கி மங்கலம் க ….
வேலியும் கற்குடிநிலன் உ னே
(லியும் பாண்….) …. நில
6......... ஆக நிலன் ருளு…. இது நிமந்த மடைத்தபடி அ…னாபோகம் நீர்ப் பழனிவயலில் ……….. இவ்வூர் மெழுக்குத் (துடவல் திருவலகு)
7.ப்புறம் கற்குடியில்ப் புது(க்கு)ப்புறம் சளு …க உ வச்சப்புறம் பாண்டியே ரிளு நீர்ப்பழனிவயலிற் திருப்பள்ளித் தாமம பறித்துத் தொடுப்
8.பாளுக்கு வ திருநந்தவனம் இறை (த்துச்) சேகண்டிகை கொட்டுவானுக்கு இவ்வூர் வக ஆக நிலன் ௩ளு நீக்கி நிலன் ….யல எம்பெரு
9.மானுக்குத் திருவமுது நிசதி ...ரு
வஸ்திக்கு அரிசி ….ப்படி …நெய்…. போது ஒரு பிடியும் கறி …. போது க…..தயிற் ……… ……….. ……….. இரவும் ப
10.கலு நொந்தா விளக்கு க சந் (தன) …ரரியும்
முன்முறை தேவதான நீர் பாயப் பெறுவதாகவும் இல்ல விளாகம் சேந்தன் கொற்
11.றன் மீயூர் விளாகம் க மழவகுழி ஆத்தியோடு புன்செவக
இப்படி பட்டு டையார்கள் சந்தெராதித்தவற செலுத்துவதாகவும் (புர) விற் சு(ருக்)
12.கி யிறையிலிழித்து குடிநீக்கித்தேவதானஞ்செய்து
குடுத்தேன் மஹிமா லையிருக்கு வேளாயின பிராந்தகன்
வீர சோழநேன் (உடை)
13.(ய)ராருளிச் (செ)
ய்யக்கல்மேல் வெட்டுவித்தோம் ஸ்வஸ்திஸ்ரீ குலராஜனுமாண விண்ணவனும் இது
பன்மாஹேஸ்வர இரஷை.
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண்.
30)
ஆதித்த கரிகாலனின் 2 - ஆம்
ஆட்சியாண்டு கல்வெட்டு தென்கரை பிரமதேயம் நந்திபன்ம மங்கலத்து திருக்கற்குடி பரமேசுவரர்க்கு
இருங்கோளக் கோனாயின புகழ் விப்பிரகண்டன் அவனிவ(ம)ல்லன்
ஒரு நந்தா விளக்குக்கு ஆடு கொடுத்தார் என்று குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
1.விரபாண்டியனைத்
தலைகொ
2.ண்ட கொப்பரகெசரிபந்மற்க்கு
3.யாண்டு உ ஆவது
தெங்கரை
4.பிரமதெயம் நந்திபந்மங்கல
5.த்து திருக்கற்குடி பரமெஸ்வர
6.ற்க்கு
இருங்கொளக்கொனா
7.ந
புகழ்விப்பிரகண்டந் அவ
8.நி வல்லந்
சந்திராகித்தவல்
9.எரிய வைத்த திருநொந்தாவி
10.ளக்கு ஒன்றிநுக்கு
வைத்த சா
11.வாமுவாப் பெராடு
தொண்
12.ணுாறு (*) தொண்ணூறுங்
கொ
13.ண்டு சூலவுழக்கால்
நிசதம்
14.உழக்கு நெ(ய்*)
கொண்டு விளக்
15.கெரிப்பொமா(ந்)னொம்
தெவ
16.ர் கந்மிகளொ(ம்)
இது
17.பந்மாஹெசுர ரச்சை
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 3, எண் 199)
இதேபோல் கி.பி.962 ஆம் ஆண்டு சுந்தர சோழனின் கல்வெட்டில் இருங்கோளர்
கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன் என்று
குறிப்பிடப்படுகிறார்கள்
கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு ஒன்று இருங்கோளன் நாரயணன் பிரித்திவிபதியார் என்பவரை பற்றி குறிப்பிடுகிறது.
இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது மகள் வானவன் மாதேவியார் ஆவார். இவள் உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாகும். இவ்
வேளிர் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலமான கி.பி. 992 ஆம் ஆண்டு
விருத்தாசலம் கல்வெட்டில் இருங்கோளன் பிரித்திவிபதி அமனி
மல்லன் என்று குறிப்பிடப்படுகிறது.
கி.பி.1014 ஆம் ஆண்டு விருத்தாசலம்
கல்வெட்டில் இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன்
என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் இருங்கோளன்
பிரித்திவிபதி அமனி மல்லனின் புதல்வன் என ஆராச்சியாலர்கள் கருதுகின்றனர்.
கி.பி.1050 - ஆம் ஆண்டு ராஜாதிராஜ
சோழனின் விருத்தாசலம் கல்வெட்டு விசையைபுரக் கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன் என்பவர் பற்றி குறிப்பிடுகிறது.
கி.பி.1130 - ஆம் ஆண்டு திட்டக்குடி
வட்டம் பெண்ணாடம் விக்கிரம சோழனின் கல்வெட்டு பள்ளி
கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன் என்ற வேளிர் அரசனைப் பற்றிக்
குறிப்பிடுகிறது.
புறநானூறில் 76, 77,
78,
மற்றும் 79 பாடல்கள் இடைக்குன்றூர் கிழார்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி பாடியவையாகும்.
அதில் பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவனிடம் தோல்விபெற்ற ஏழு
மன்னர்களைப்பற்றி குறிப்பிடுகிறார். பாண்டியனை மள்ளர்
என்றும், அவனிடம் வம்பு செய்து போருக்கு வந்த எழுவரை வம்ப மள்ளர் என்று இடைக்குன்றூர் கிழார் தெளிவாக
குறிப்பிடுகிறார். அந்த வம்ப மள்ளர் எழுவர் சேரல், செம்பியன், சினம்கெழு
திதியன், பொலம்பூண் எழினி, எருமை யூரன்,
இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன் என்று அகநானுறு பாடல் 36 குறிப்பிடுகிறது.
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழக்
(புறம். 77 - 9 -11)
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
(புறம். 78
- 6 -8)
வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.
(புறம். 79
- 4 -6)
சேரல், செம்பியன்,
சினம்கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
(அகம். 36
– 15 - 20)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு
மற்றும் இலக்கிய சான்றுகளிலிருந்து இருங்கோவேள் வம்சத்தவர்கள் மள்ளர் குலத்தவர்
என்பது உறுதியாகிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment