Wednesday, 28 September 2016

பகுதி 4 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

இனி துவராபுரியில் இருந்த குடும்பர்கள் ஆட்சி செய்தார்களா? என்பதை ஆய்வு செய்வோம்.



அன்னியர் படையெடுப்பால் ஆட்சி அதிகாரத்தை இழந்த பாண்டியர்கள் மதுரையைவிட்டு வேறுசில பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். ஒரு காலத்தில் பாண்டியருக்குத் திறை செழுத்தி குறுநில மன்னரான ஆட்சி செய்த மாவலிவாணராயர்கள்   அக்காலத்தில் அன்னியர்களுக்கு துணைநின்றனர். அப்பொழுது மதுரையில் நடந்த குழப்பத்தை போக்குவதற்க்காக  பாண்டிய மன்னனுடைய வைப்பாட்டி, காளையார் கோவில் தாசி அபிராமி என்பவளின் மக்களாகிய சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயர், காளையார்சோமனார், அஞ்சாத பெருமாள், முத்தரசர் இவர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டியனுக்குப் பிறந்த பிள்ளைகள் என்று பட்டம் கட்டி மதுரையை ஆண்டு வரச் செய்தனர்.  பழைய பாண்டியர் வழி வந்தோர் இக்காலத்தில் மதுரையை விட்டுத் தெற்கே சென்றனர். 

அப்போது மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன்(வாணதிய ராயர்) -க்கும் தட்சணஞ் சீர்மையில் ஆட்சி செய்த பழைய பாண்டியன் மரபில் வந்த   சுண்டன் பள்ளனுக்கும்  கருத்து வேறுபாடு காரணத்தால் சுண்டன் பள்ளன் மதுரை வாணதிய ராயருக்கு விரோதமான செயலில் ஈடுபட்டான். அவன் செயலை கட்டுப்படுத்தும் பொறுப்பை காடவர் தலைவனிடம் வாணதிய ராயர் கொடுத்தான்.  அச்செயலை திறம்பட செய்த காடவர் தலைவனுக்கு பள்ளன் சுண்டன் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை வாணதியராயர்  தானமாக வழங்கினான். அப்பகுதியை ஆட்சி செய்த காடவர் தலைவர்கள் பாண்டிய வன்னியனார்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இச்செய்தியை சிவகிரி, அளகாபுரி, சிதம்பரம் போன்ற பகுதியை ஆட்சி செய்த பிற்கால பாளையக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு தொல்லியல் துறை பாளையப்பட்டுக்களின் வம்சாவளி என்ற நூலில் இச்செய்தியை தொகுத்துள்ளது. அவற்றை கீழே காண்போம்.



அப்போதிருந்த பட்டக்காரன் அம்பைத் தறைக்குடி யாண்டு கொண்டாரை பாண்டியராசா ஆனவர் வரவளைத்து தட்சணஞ் சீர்மையில் சுண்ட னென்ரொறு பள்ளன் சிறிது துஷ்ட்டாளையுஞ் சேகரித்துக் கொண்டு வெகு சல்லியங்கள் செய்து வருகுரான். ஆன படியினாலே நீரவடத்துக்குப் போயி அந்த துஷ்ட்டாளை நிற்கிரகத்துப் போட்டு வரவேணுமென்று சொல்லி யனுப்பிவிச்சார்கள். அந்தப் பிரகாரமே பிறப்பட்டு வந்து சுண்டனென்று சொல்லப்பட்ட பள்ளனையும் அவனுடனே சேந்த துஷ்ட்டாளையுஞ் செயம் பண்ணிவிச்சுப் போட்டு மறுபடியும் பாண்டிய ராசாவிநிடத்துக்குப் போயிக் கண்டு சமாசாரம் பேசிக் கொண்டதில் வெகு சந்தோஷமாயி அனேக வரிசயளும் விருதுகளுங் கொடுத்து யின்னும் அந்த தெட்சணஞ் சீர்மையில் சில துஷ்ட்டாளிருந்து கொண்டு சல்லியங்கள் செய்து கொண்டு யிருப்பதுனாலே அந்தத் தெட்சணத்தில் உமக்கு சிறுது சீர்மை விட்டுக்குடுக்குரோம். அதுலேயிறுந்து கொண்டு துஷ்டாளையும் ஒடிக்கி சல்லியம் யில்லாமல் செய்து கொண்டு யிறுமென்று உத்திரவு செயிது அந்தப் பிரகாரம் சீர்மையுஞ் சுதாவாக விட்டுக் குடுத்து அனுப்பிவிச்சார்கள்.
…………………………………………………………......................................................

தென்காசியில் ராசரிக்கமாயிறுக்கப்பட்ட ராமவர்ம்ம குலசேகர பாண்டிய ராசாவுக்கு பிறுதி வாதியாயி வந்த தாயாதிக்காரறா செய்த யிடைக்கூறினாலே விபத்து வந்ததில் அந்த விபத்துக்கு ராமவர்மகுலசேகர பாண்டிய ராசா ஆனவர் சகத்துரை ஆண்டு கொண்டாரை வரவளைத்து யிந்த விபத்தைத் தீற்க வேணுமென்று சொன்னபடிக்கி அந்த வேளை முன்னின்று ஆரம்ப ... தத்துவத்தினாலே உத்திரவாதஞ் செயிது சல்லியத்தைத் தீற்துக் கொடுத்தப்படியினாலே ராமவர்ம குலசேகரப் பாண்டிய ராசாவுக்குப் பிறுதி யுண்டாயி ராமவர்ம்மகுல சேகர ஆண்டு கொண்டாரென்று பேறுங்கொடுத்து தென் காசி மூப்புக்கூறும் விட்டுக்கொடுத்து அதற்குப் புலியூர் மேட்டில்க் கல்நாட்டி மால் வைத்து அது முதல் நான்கெல்லை யிலும் சிறிது சீற்மையும் விட்டு சந்திராதித்தாளுள்ள மட்டும் ஆண்டனுபவித்துக் கொண்டு வரச்சொல்லி உத்திரவு செயிது அனுப்பிவிச்சார்கள்.

 (தமிழக அரசு தொல்லியல் துறை  - பாளையப்பட்டுக்களின் வம்சாவளி -     சிதம்பர வன்னியன் வமிசாவளி   D. 2841)



துவாபர யுகத்தில் யெங்கள் முன்னோர்கள் ரிஷி சாபத்தாலேப் பன்றி வயற்றில் பிறந்து மீனாட்சியம்மன் திருமுலைப்பால் கொடுத்து அந்தப் பன்றிச்சன்மம் விமோசனமாயி அவர்களுக்கு அப்போது மதுரையிலிருந்த பாண்டிய ராசாக்கள் தெய்வ கடாட்சம் பெற்றவர்க ளென்றறிந்து அபிமானித்துச் சிறுது சீற்மையும் விட்டுக்கொடுத்து சிறுதுகாலம் நடந்து வந்திருந்ததில் அவர்கள் வங்கிஷத்தில் வரகுண ராமனென்று ஒருதன் சென்மித்திருந்ததில் அப்போது மதுரையிலிறுந்து பாண்டிய தேசாதிபத்தியம் பண்ணிக்கொண்டிருந்த பாண்டிய ராசாக்களுக்கு ஒரு இடுக்கம்வந்து யிவராலே அந்த யிடுக்கம்ந் தீர்க்கப்பட்ட படியினாலே சயதுங்க வரகுணராம பாண்டிய வன்னியனென்று பேருங்கொடுத்து திருப்பூவனத்தில் மேற்படி சீர்மையுங் காவலும் விட்டுக்கொடுத்து பாண்டிய தேசத்துக்கு அதிபதியாகிய சயசிங்க...  பாண்டிய ராஜா வரகுணராம பாண்டிய வன்னியனாரை வரவளைத்து  சொன்ன
:……………………………………………………...........................................................
 
வன்னியனார் சீமையை ஆண்டு வருகுரபோது பாண்டிய ராசா மதுராபுரிக்கி வரவழைத்து உத்திரவான செய்தியென்ன வென்றால் : சோள ராசாவுக்கும் நமக்கும் பகை வந்து அவர் நம்மிட பேரில் சண்டைக்கு வருகுர படியினாலே நீயும் உன் சனமும் குமுக்குடனே பிரப்பிட்டு வந்து அவர் படையுடனே யெதிர்த்து சண்டை செய்து செயங் கொண்டு வரவேணுமென்று உத்திரவானபடிக்கி தன் சனச் சேகரத்துடனே, சோளன் படைக்கி யெதிரே போய், அவர்களையும் அபசயப்படுத்தி, பாண்டிய ராசாவுக்கு சயமுங் கொண்டு வத்து பாண்டிய ராசாவைக் கண்டதில் அவருக்கு மிகவும் சந்துஷ்ட்டி வந்து, கன்னடி காத்தா னாடு னுாத்தி எட்டு கிராமம் காவலாய்க் குடுத்து அனேக வெகுமதியும் பண்ணி திருப்பூவனத்துக்கு அனுப்பிவிச்சார்கள்.
 ………………………………………………………………………...................................

மதுரைப் பாண்டிய ராசா தாஷ்ட்டீக சவுந்திர பாண்டிய வன்னியனாரை வரவளைத்து இராசா உத்திரவு குடுத்தது என்னவென்ரால், தட்சண சீமையில் சுண்ட னென்றொறு பள்ளன் சிறுது சனச்சேகரத்துடனே அந்தச் சீமையை அனேக விதமாக நிபாதப்படுத்தியிருக்குகுரபடியினாலே நீயும் உன்னுடைய புத்திராள் முதல் சகல தனத்தையுஞ் சேகரித்துக்கொண்டு தட்சண சீர்மைக்கிப்போய் அந்த சுண்டனையுஞ் சங்காரம் பண்ணி சீர்மையிலுஞ் சல்லிய மில்லாமல் ஒடிக்கிவிச்சுத்திரும்ம மதுரைக்கிப்போயி பாண்டிய ராசாவைக்கண்டு நடந்த வரலாரெல்லாஞ் சொல்ல ரெம்பவுஞ் சதுஷ்ட்டியாயி யிப்படி பராக்கிரமமுள்ள நீங்கள் தெட்சிணத்தில்த்தானே யிருங்களென்று அனேக விருதுகளும் அனேக வெகுமதியுங்குடுத்து தெட்சிணஞ் சீர்மையில்த்தானே யிருங்களென்று பட்டமும் கட்டி அனுப்பி விச்சார்கள்.


(தமிழக அரசு தொல்லியல் துறை - பாளையப்பட்டுக்களின் வம்சாவளி    - அளகாபுரி ஜமீன்தார் வமிசாவளி - D. 2849)


இவ்வாறு சோழ மன்னனுக்கு எதிராகவும், சுண்டன் பள்ளனுக்கு (பாண்டியன்) எதிராகவும் போரில் ஈடுபட்டதற்க்கு கூலியாக காடவர் தலைவன் வாணதிய ராயரிடம் தானமாக பெற்ற சில பகுதிகளுக்கு அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு அரசு அதிகாரியாக செயல்பட்ட காடவர்கள் பிற்க்காலத்தில் நாயக்க மன்னருக்கு கீழ் கட்டுப்பட்ட பாளையக்காரர்களாக இருந்து ஆட்சி செய்தனர். இவ்வாறு தோன்றியதில் ஒன்றுதான் சிதம்பரம் பிச்சாவரம் பாளையம். இப்பாளையக்காரர்களுக்கும் மூவேந்தர் பரம்பரையான மள்ளர் குலத்திற்க்கும் யாதும் தொடர்பு இல்லை.



காடவர் வென்ற பள்ளன் சுண்டனின் முன்னோர்கள் பற்றி நாம் இனி ஆய்வு செய்வோம்.



இராமநாதபுரம் கோட்டத்துச் சிவபுரியை ஆண்ட சுண்டன் கங்கை கொண்டான் ஒருவன். இவனுக்குத் துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர் (ARE 47 of 1929)

( டாக்டர். மா. இராசமாணிக்கனார்  -   சோழர் வரலாறு  - பக். 281)




இராமநாதபுரம் சில்லா, திருப்பத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர் ?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது. (ARE 47 of 1928.)

(மயிலை சீனி. வேங்கடசாமி - தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 193 )




(A. R. No.  47 of 1928 - 29.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.

Tribhuvana chakravarthi  vikrama chola deva 7th year. This record States that Sundan Gangaikondan alias Tuvarapativeln promised to give some land as   udirappatti to the dependents of those swordsmen (talilar) who died fighting on the field.




No. 218.
(A. R. No.  66 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the belt of the verandah in the first prakara, Svayamprakasa temple.
This record dated in the 8th year of Tribhuvanachakravartin Srivallabhadeva has to be assigned to this king Jatavarman Srivallabha.  It registers that Danadan Pagaivenra-kandan alias Tuvarapativelan made a gift of land by name Anjadakanda-Navalkulam by purchase, for the kitchen expenses of the temple at Tiruttandonrisvaram-Udaiyar at Nripasekhara-chaturvedimangalam, a brahmadeya in Keralasinga-valanadu.

  1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் சிவல்லதெவற்கு யாண்டு ஆ – வது கெரளகிங்க வளநாட்டு …………. … நிருபசெகர சதுபெதி மங்களத்து திருத்தான்தொன்றிசுரமுடையாற்கு
  2. தனதந் பகைவென்றகண்டநாந துவராபதி வெளாநெந் இத்தெவற்கு திருமடை(ப்)பள்ளி புறமாக இறைகழித்து குடுத்த நிலமாவது சுரவிநாட்டு வெள்ளா(ர்களில்) சிறைகண்டன் பெற்றா
  3. னுள்ளிட்டார் பக்கலும் உய்யநின்றாடுவார் பக்கலும் இத்தெவர் ஆதிசண்டேஸ்பர் திருநாமத்தான விலைகொண்ட அஞ்சாதகண்ட நாவல்குளம் வளையில் சுற்று முற்றிலும் உள்ள புஞ்செ நஞ்செயு மற்றும் எற்ப்பெற்பட்டநவு மிறை கழித்து குடுத்தெந் தனதந் பகைவென்ற கண்டநாந துவராபதி வெளாந் இது பந்ம்மாகெஸ்வர ரஷை. 

     (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.218,  மற்றும் A. R. No.  66 of         1929.)


No. 242.
(A. R. No.  37 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south wall of the second prakara in the Svayamprakasa temple.
This inscription dated in the 18th year of the king relates to the gift of one ma of land in Aruviyur as measured by kuditangi by Arumunaigandar which was purchased from the officials of Devar Duvarapativelar, for the expenses of the temple of god Pillaiyar Desinayaka at Aruviyur alias Desi-Uyyavanadapattanam in Keralasinga-valanadu.  It is not known why this record was engraved in this temple.


  1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு யஅ பதிநெட்டாவது பாண்டிமண்டலத்து கெரளகிங்க வளநாட்டு அரு
  2. வியூரான தெசி உய்யவந்த பட்டணத்துப் பிள்ளையார் தெசிநாயகற்கு தெவர் துவராபதி வெளார் கந்மிகள் பக்கல் அருமுனைகண்டர் கொண்
  3. டு குடுத்த நிலமாவது அருவியூர் வயலில் வடக்கில் மடைக்கு வாய்க்காலுக்கு வடக்கு சங்காண்டி வய்க்கலும் இதன் கீழை ஐய்யநம்பி வயக்க
  4. லும் இதற்கெல்லை கீழெல்லை நொந்றிவயக்கலுக்கு மெற்கும் வடவெல்லை தெற்கும் மெலெல்லை கரைக்குக் கிழக்கும் வாய்
  5. க்காலுக்கு வடக்கும் இந்நாங்கெல்லைய்க்குள்பட்ட நிலங் குடிதாங்கியால் ஒருமாவும் திருமடைப் பள்ளிப்புறமாகச் சந்திராதிச்ச
  6. வற் செல்வுதாக தெசிநாயகற்கு பன்மாஹேஸ்வர இரஷை.

     (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.242, மற்றும் A. R. No.  37            of  1929.)      




No. 243.
(A. R. No.  39 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south Wall of the second prakara in the Svayamprakasa temple.
This record of the 18th year relates to the founding of an agaram called Seyyamangalam with the new name of Ambalattadi-chaturvedimangalam, by Kanda-Sundan alias Duvarapativelan, for the merit of Sundan-Kandan alias Duvarapativelan, who was presumably his father.  The lands in the village were divided into twenty shares and granted to 20 brahmanas who colonized therein.  A tax of one diramam per ma of cultivated land, and no other tax was ordered to be levied on these colonies.  The document was caused to be engraved in the temple by Sundan Pagaivenra-Kandan alias Duvarapativelan.


  1. ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையும் ஜயமடந்தையும் திருப்புயங்களி லினிதிருப்ப இருநிலமும் பெருமை எய்த எண்டிசையுங் குடை நிழற்ற மன்னரெல்லாம் வந்திறைஞ்ச வருமரபில் மணிமுடிசூடி தெங்குமரியும் வடகங்கையுந் திரைக்கடலெ எல்லையாகப் பார்முழுதுங்கயலா(ணை)
  2. பரந்து செங்கொல் உடன் மன்னிய …………. உலகமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய மாமுதல் மதிக்குலம் விளங்கிய கொமுதல் கொச்சடையபற்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு   பதினெட்டாவது சித்திரை(த்) திங்கள் பாண்டி(மண்)
  3. டலத்துக் கெரளகிங்க வளநாட்டு அகர ………… செய்யாமங்கலமான அம்பலத்தாடக் சதுப்பெதிமங்கல மென்னும் பெரால் இருபது …………….. கிழெல்லை முதத்த குளத்து மெலெல்லை(க்)கு மேற்கும் தெங்கிழெல்லை தெற்றியூர் குளத்துளவாய பெ…. ஆலிக்கு வடக்கும் தெனநெல்லை காட்டுருண்ணிக்கு வடக்(கும்)
  4. தென்மெலெல்லை மலையாழ்வான் தொட்ட மகப்பட மெலெ(ல்)லை திருநாடுடையான் தொட்டத்தும் வடவாயூருணிக்கு தெற்கும் இதன் வடகரை கொண்டிசொவ்வை மச்சிறுப்(பா)ள் மெல் வரப்பு முட்ட அவ்வரப்புக்கு கிளக்கும் சிறுச்செய்யாமங்களத்துலைக்கு தெற்கும் இதன் கீழெல்லைக்கு கிழக்கு (ம் இ)
  5. தன் வடவெல்லைக்கு வடக்கும் இக்குளத்து (வு)டகடை கொண்டிசொவை அமர்தாங்கி பொயன் ஊருண்ணிக்கு கிழக்கும் சிற்றுச்சத்துருகாலன் வசக்கல் நீர்கொவையாக வட எல்லை அஞ்சாத கண்டன் ஊருண்ணிக்கு தெற்கும் வடகிழெல்லை அருவியூர் சிறுகுழத்து சிறுகுழத்து மெலெல்லைக்கு மெற்க்கும் இச்சுற்று முற்றும் உள்படு
  6. குடுகாடுகளும் உண்ணில மொழிவின்றி ……………………………. குரித்தாமண்ணம் இருபது கூற்றெலையும் குடுத்து அக்கூறெ …………. நம் பண்ணிக்குடுத்து இதுக்கு ……………………. மாக இந்நாட்டு …………  ……….. செகரச்சதுப்பெதிமங்கலத்து மகாதெவர் திருத்தான் தொன்றீஸ்வரத்து தருணெ……வரர் கொ
  7. விலில் ஆண்டா(ர்)களும் பலமண்டலத்து பன்மாஹெஸ்வரரும் பட்டு கெட்டும் இட்டு அட்டியும் இ(வ்)வகரத்துக்கு அழிவுசெய்வாரை காத்தும் கா(ப்)விச்சும் இவகரம் விளை நிலத்துக்கு விளைஞ்ச நிலத்தால் கொல் அருள்நிதியால் ஒருமா(ச) செய்க்கு ஆட்டொரு திரமம் இத்தெவற்க்கு ஸ்ரீ
  8. பண்டார(த்)தெ ஒடுக்கிவிச்சு(க்) கொண்டு இ……….ணரை மற்றெப்பெர்பட்டுது கொள்ள(ப்) பெறாதாராகவும் இப்படி சுந்தன் கண்டனான துவராபதி வெளான் பெயரால் அவனுக்கு நன்றாக கண்டன் சுந்தனான துவராபதி வெளான் செய்த  …..த்தை இவ்விருபது  ……………..ணர் னம்ம
  9. உத்தொடும் இக்கோயிலிலெ இப்படி கல்வெட்டி குடுத்த சுந்தன் பகைவென்ற கண்டனான துவராபதி வெளாநென்.

(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.243, மற்றும் A. R. No.  39 of 1929.)




No. 249.
(A. R. No.  38 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south wall of the second prakara in the Svayamprakasa temple.
This record states that Velan Uyyaniraduvan of Pandangudi in Sura-nadu made a gift of a field called Anjada gadan for the kitchen expenses in the temple of Tiruttandonir-Isvaramudaiyar at Nripasekhara-chaturvedi mangalam in the 20th year of the reign of Srivallabhadeva.

1.    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு உய இருபதாவது கெரளகிங்க வளநாட்டு  ….
2. ஷெயம் நிருபசெகர சதுபெதி மங்களத்து திருத்தாந்தொன்றி ஸ்வரமுடையாற்கு சுரநாட்டுப்
3. பாண்டங்குடி வெளாந் உய்யநின்றாடுவாந் (பலர்) பக்கலும் விலைகொண்ட அஞ்சாத கண்டன் வழை(யி)ல் சுற்று முற்றும் இ
4.    தெவ(ர்)க்குத் திருமடை(ப்) பள்ளிப்புறமாகக் கொண்டு விட்டா(ன்)


( தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.249,  மற்றும் A. R. No.  38 of 1929.)



மேலே கொடுக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளில் இருந்து பள்ளன் சுன்டன் என்பவன் துவராபதி வேளான் என்றும் தேவர் துவராபதி வேளார் என்றும் அழைக்கப்பட்டுள்ளான். மேலும், அவன் சுந்தன் கண்டனான துவராபதி வேளான் என்றும், சுந்தன் பகைவென்ற கண்டனான துவராபதி வேளாநென் என்றும் குறிப்பிடப்படுகிறார். அவரது மகன் கண்டன் சுந்தனான துவராபதி வேளான் என்றும் அழைக்கப்படுகிறார்.



இந்த சுந்தன் சந்ததியரைத்தான் காடவர் தலைவன் பிற்காலத்தில் வென்றதாகவும், அதற்காக அளகாபுரி, சிதம்பரம், சிவகிரி போன்ற பகுதியில் ஆட்சி செய்யும்படி பொறுப்பு கொடுத்ததாகவும் கூறிக்கொள்கின்றனர். மேலும் பாண்டியனுக்கும், சோழனுக்கும் நடந்த சண்டையில், பாண்டியர் பக்கம் நின்று சோழருக்கு எதிராக போர் செய்த காடவருக்கு கானாடு பகுதியில் மள்ளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நூற்றியெட்டு கிராமங்களில் சிலவற்றை பாண்டிய மன்னன் தானமாக கொடுத்ததாகவும் இதே பாளையக்காரர்கள் பெருமையாக கூறிக்கொள்கின்றனர்.

                                                                                                                   (தொடரும்)



No comments:

Post a Comment