Tuesday, 29 May 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 6 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி - 6

x---------x----------x-----------x------------x



கள்ளர்கள் திருட்டுத்தொழில் செய்துள்ளார்கள் என்பதை குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டுகள் உறுதிசெய்துள்ளதை முந்தைய பதிவில் பார்த்தோம். மேலும் இப்பதிவில் பாண்டிய நாட்டில் திருட்டுத் தொழிளில் ஈடுபட்ட கள்ளர்களை ஒடுக்கிய ஒரு மறவருக்கு அப்பகுதியின் தலைவனாக பட்டம் சூட்டி சில உரிமைகளையும் கொடுத்துள்ளனர் என்பதை  பாளையப்பட்டுகளின் வம்சாவளி குறிப்பிடுகிறது.



ஆதியார்ப்பியம் யெங்கள் முன்னோர்கள் குத்தாலத் தேவரும், மருதப்பதேவரும் கீளுவைக் குண்டையங் கோட்டையிலிருக்குறபோது மேல்னாடு திறச்சுளீகை பழனிமடஞ்சீற்மை கள்ளர் குண்டையங்கோட்டை னாட்டுக்கு வந்து சவ்விறியஞ் செய்தார்கள். அப்போது யெங்கள் முன்னோர்கள் குத்தால தேவரும் மருதப்ப தேவரும் அந்த மேல்னாட்டுக் கள்ளரை அதம் பண்ணி திறச்சுளீகைப் பழனிமடம் மேல்னாடு வரைக்கும் போய் அதிலிருந்த கள்ளரை இல்லையெனச் செய்விக்கிறவரையில், இது செய்தி அப்போதிருந்த பாண்டியறாஜா கேட்டு குத்தாலத் தேவரையும் மருதப்பதேவரையும் வரவளைத்து, திருச்சுளீபழனி மடஞ்சீற்மை கள்ளறாகிறபேரை நீர்ச் சின்னாபின்னஞ்செய்து அது நிமித்தியம் உம்முடப் பாசவற்கத்திலும் சிறுது செனம் சேதமாய்ப் போனபடியினாலே குத்தாலதேவர் மருதப்பதேவர் நீங்களிருபேரும் திருச்சு பளனி மடசீர்மையை பாளையப் பட்டாக பேர் பாதியாகப் பகுந்துகொள்ளச் சொல்லி உத்திரவாயி வரகுணராம குத்தாலதேவரென்று பேருங்குடுத்து அஷ்ட கோண பல்லாக்கும் உபயசாமரமும் மகர கொடியுடன் குடுத்து மருதப்பதேவருக்கும் வேணவெகுமதியுங் குடுத்து பாளை யப்பட்டாக கோட்டையும் போட்டு பேர்பாதியாக ஆண்டு அனு பவித்துக் கொண்டியிருந்தார்கள்.

(நடுவுக்குறிச்சிப் பாளையக்காரன் வமிசாவளி கைபிது - தமிழ்நாடு அரசு பாளையப்பட்டுகளின் வம்சாவளி - II)



அழகர் கோயில் இறைவன் திருமுன்னில் வேடர்கள் நுழைந்து அங்கிருந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் திருவாபரணங்களைக் கொள்ளையிட்டுச் சென்றுவிட்டனர். இதனைக் கோயில் தலத்தார் திருமலை நாயக்கரரிடம் முறையிட்டனர். திருமலை நாயக்கர் வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் இம்முனி கனகராமயக் கவுண்டரை அழைத்துக் கள்ளர்களைப் பிடிக்கவும், கொள்ளை போன பொருட்களை மீட்கவும் ஆணையிட்டார்.  கவுண்டரும் ஆணையை நிறைவேற்றி, கொள்ளை போன பொருட்களை மீட்டுக் கோயிலில் சேர்த்துக் கள்ளர்கள் தலையை வெட்டித் திருமலை நாயக்கர் முன் பொதியாகக் கொண்டு சென்றார். திருமலை நாயக்கர் மகிழ்ந்து, ஏற்கெனவே இந்தப் பாளையப்பட்டிற்கு விசுவநாத நாயக்கர் காலத்தில் அளிக்கப்பட்ட பாளையப்பட்டுக் கதிராமங்களுக்காக் பொடுக்க வேண்டிய காட்சி, கப்பம் முதலியவற்றை நீக்கியதோடு (மாப்பு செய்தல்) சித்திரை விழா, ஆடித்திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகியவற்றில் அவரும் அவரது சுற்றமும் சிறப்புப் பெறவும் வகை செய்து கொடுத்தார் என்று இச்செப்பேடு விவரிக்கிறது.



செப்பேட்டின் வாசகம் :

x--------------x-------------x



26."…………..திருமாலிருஞ்சோலை தென்திருப்பதியில் ஆண்டவன் சன்ன

27.தியில் வேடற்களடற்ந்து புகுந்து அனேக திருவாபறணங்களை

28.யும் சொர்ணபாத்திரம் வெள்ளிப்பாத்திரங்கள் முதலான சாமான்

29.களிள கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாய் தலத்தார்

30.வந்து கூக்குரல் போட்டதில் தம்மை வறவழைத்துக் கள்ளரை

31.வெட்டிச் செயித்து களவு போன ஆவறணம் பாத்திர

32.முதலானதுகளை வாங்கிக் கொடுக்கும்படி அனுப்பி வை

33.க்க தாமுந் தளசேகறத்துடன் போய்த் துப்புத்துவருடனே

34.களவாளிகளைக் கண்டுபிடித்து அவற்கள் களவில்க் கொண்டு

35.போன சொத்துக்களை ஒன்று தவறாமல் வாங்கி ஆண்டவன்

36.கருவெலப் பொட்டியில் சேற்த்துப் போட்டு அவற்கள்

37.தலைகளை வெட்டிப் பொதிபிடித்து சமூகத்தில் கொண்டு

38.வந்து வைத்து சியப் பிரதாவஞ் சொல்லி கும்பிட்ட முன்னுகு

39.சந்தோஷமாகி அந்த சந்தோஷத்தில் சாதனம் யெளுதிக்

40.கொடுத்தோம்"

(வெள்ளியங்குன்றம் செப்பேடு - திருமலை நாயக்கர் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1)



இராமநாதபுரத்தை தலமை இடமாகக் கொண்டு பிற்க்காலத்தில் ஆட்சி செய்த சேதுபதிகளின் தோற்றமே அக்காலத்தில் களவு தொழிளில் ஈடுபட்ட கள்ளர்களை ஒடுக்கியதற்க்காக மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்த பரிசு என்றும் கூறுகின்றனர்.



இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித் திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும் அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும், அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது ஒரு செய்தி " (கீழ்த்திசை சுவடிநிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS) , எஸ். எம். கமால் - சேதுபதி மன்னர் வரலாறு பக். 14)


இராமேசுவரம் பாதையில் கள்ளர் தொல்லையைக் களைந்து மன்னர் மனநிறைவு கொள்ளும் வகையில் பணியாற்றிய இளமனுார் சோளகை சேர்வைக்காரனுக்கு மலங்கரை என்ற கிராமத்தை ரெகுநாத சேதுபதி தானமாக வழங்கப்பட்டுள்ளதாக செப்பேடு தெரிவிக்கின்றது.

(எஸ்.எம். கமால் சேதுபதி மன்னர் செப்பேடு பக் – 305)



தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி இராமேசுவரம் இராமனாத பண்டாரத்திற்கு எழுதிக்கொடுத்த செப்பேட்டில் கோவிலுக்குச் சொந்தமான பசுமாடு, எருமைமாடு போன்றவற்றை திருடும் கள்ளர்களை கோவில் பண்டாரமே தண்டனை கொடுக்கவும், அவதாரம் வாங்கிக் கொள்ளவும் உரிமை வழங்கியார்.



செப்பேட்டுச் செய்தி

x------------x------------x



23)கோயில் நந்தவனம் கோயில்வகை வாழைத் தோப்புத் தென்னந்தோப்பு இலுப்பைத் தோப்புப் பனைந் தோ

24.ப்பு இது முதலான தோப்புக்களிலே அன்னிதாக இருக்கிற மானிடர் போய்த் திருடினார்களேயானாலந்தக் கள்ளனைப் பண்

25.டாரமே தெண்டினை பண்ணி அவராதம் வாங்கிக் கொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டோம் பண்டாரத்தின வகை

26.ப்பிராமணப்பிள்ளையள் தவசிப்பிள்ளையன் அவரைச்சார்ந்த சனங்களுக்கும் பாம்பன் துறைக்குப் பண்

27.டாரத்தின் சீட்டின்படிக்கு தோணிவிடச் சொல்லிக் கட்டளை யிட்டோம் யாதாமொரு கள்ளரைப் பண்டாரங்

28.காவல்ப்பண்ண வேணுமென்று கொல்லன் தச்சனை யழைக்கச் சொன்னால் அந்தப்படிக்குக் கேள்க்கச் சொல்

29.லிக் கட்டளையிட்டோம் கோவில் வகையாகயிருக்கிற பசுமாடு எருமைமாடு மடத்துப்பசு எருமைமாடு உ

30.ண்டானதுகளை யாதாமொரு கள்ளர் திருட்டுபிரட்டு நடப் பிச்சால் பண்டாரமே தெண்டினைபண்ணி

31.அவராதம் வாங்கிக்கொள்ளவும் பாம்பனாற்று வழியாகவும் கல்லடிசாலை அக்கினி தீர்த்தக் கரை புளியடி

32.த்துறை புங்கடித்துறை இந்தத் துறைமுகங்களிலே கோயில் வகை மாட்டை யாதாமொருதர் தோணி யேற்றி

33.க்கொண்டுபோனால் பண்டாரம் அவர்கள் தலத்து மணியக்காரனுடனே சொல்லி மணியக்காரன் அந்தக் கள்ள

34.னைத் தெண்டினை பண்ணாதே போனால் நம்முடனே சொல்ல அவர்களை நாமே தெண்டினை பண்ணிக் கோ

35.விலுடமை வாங்கித் தருவோமாகவும் இந்தப்படிக்கு ராமீசுர கோவில் ராமனாத பண்டாரமவர்

36.களுக்குத் தாம்புர சாதன பட்டையங் குடுத்தோம் அந்தப் படிக்கு நடப்பிச்சுக் கொள்வாராகவும்

-------------

(எஸ்.எம். கமால் சேதுபதி மன்னர் செப்பேடு பக் – 124)



 இதேபோல் கள்ளர்களுக்கு தண்டனை கொடுத்தும் அவர்களது மனவிகளை இழிவுபடுத்தியதையும் பிற்க்கால சேதுபதி வரலாறுகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.


"விசய ரகுநாத சேதுபதியின் ஆட்சியின்போது கள்ளர் குழு ஒன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் புகுந்து சூறையாடி அரசரின் உடமையான இரண்டாயிரம் காளைகளைக் கவர்ந்து சென்றுவிட்டது. இதனால் பெரிதும் எரிச்சலுற்ற மன்னர் இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் ஐந்து கோட்டைகளைக் கட்டுவித்து அந்த நாட்டின் முதன்மையானவர்களோடு தான் நல்லெண்ண முடையவராக நட்புக் கொள்ளப் போவதாகக் கூறி அழைப்புவிடுத்து வருவித்து அவர்கள் மனத்தில் நம்பிக்கை வளரும்படியாகப் பல சிறப்புக்களைச் செய்து இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான அவர்களைக் குத்திக் கொல்ல ஏற்பாடு செய்தார். அவ்வாறு கொலையுண்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இராமேசுவரத்திற்குக் கடத்திக் கொண்டுபோய் அங்கு அவர்களுக்குக் கோயில் முத்திரையிட்டு அவர்களைக் கோயிலுக்குரிய தேவ தாசிகளாகவும், அடிமை மகளிராகவும் ஆக்கினார். புகழ்பெற்ற அந்தத் தீவில் தற்போது உள்ள ஆடல் மகளிர் அந்தக் கள்ளர் சாதியின் வழிவந்தவர்கள் எனக் கூறப்படுகிறது."


(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3, பக். 80)



மதுரையில் திருமலை நாயக்கன் அரண்மனையில் மன்னன் நித்திரை செய்யும் கட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அரண்மனை முகப்பில் கட்டப்பட்டிருந்தது. மன்னன் அயர்ந்து தூக்கத்தில் இருக்கும் போது கள்ளன் அரண்மனை முகப்பின் மீது ஏறி அதன் மேல் இருந்த துவாரத்தின் வழியாக அரண்மனை உட்புறம் சங்கிலி வழியாக கீழே இறங்கி மன்னனின் விலை உயர்ந்த நகைகளைக் கவர்ந்து சென்று விட்டான். திருமலை நாயக்கன் திருடன் நேரில் வந்து திருட்டை ஒப்புக் கொண்டால் அவனுக்குச் சன்மானம் வழங்குவதாக நாட்டில் பறை மூலம் விளம்பரம் செய்தான். நகைகளைத் திருடிய கள்ளன் தைரியமாய் மன்னனிடம் நேரில் வந்து திருட்டுக் குற்றத்தை ஒப்புக் கொண்டான். மன்னன் வாக்களித்தபடி சன்மானமாகக் கள்ளனுக்கு நிலம் வழங்கினான். ஆனால் அவனது குற்றத்திற்குத் தண்டனையாக அவனைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான்.



(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3, பக். 81).


இச்சான்றுகளை நாம் பார்க்கும்பொழுது மூவேந்தர் காலம் தொட்டு சேதுபதிகள் காலத்திலும் அடுத்தவர் உடமையை திருடுதல்   என்பது கொலை குற்றத்தைவிட மிகப்பெரிய குற்றமாக கருதி அவற்றில் ஈடுபட்ட கள்ளர்களுக்கு மரணதண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.



(தொடரும்)










Saturday, 19 May 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 5 PandyanMallar




குற்றமும் - தண்டனையும் பகுதி - 5

x---------x----------x-----------x------------x


நாம் இதுவரை பார்த்த சான்றுகளிலிருந்து ஒருவன் கொலை செய்தாலும் அதற்க்கான  தண்டனை பெறுபவர் குடும்ப சூழ்நிலையை ஆய்வு செய்து அவற்றிலிருந்து விளக்கு அளிக்கப்படுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில் குற்றம் சாற்றப்பட்டவர் பேரையன் போன்ற உயர் பதவியில் இருந்தாலும் குற்றத்திற்க்கான தண்டனையை  பாகுபாடுகள் காட்டாமல் சித்திரமேழி சபை (வேளாண் சபை) வழங்கியுள்ளதையும் கல்வெட்டுகள் சான்று பகர்கிறது.


விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) 11 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பெண்ணைத் தென்கரை கடம்பூரில் வாழும் வெள்ளாளந கூடல் என்பானுக்கும் இவ்வூரில் உள்ள பிச்சன் பன்மன் கண்டன் என்பானுக்கும் இடையே நடந்த சண்டையில், கூடல் என்பானைப் பிச்சன் குத்திக் கொன்றுவிட்டான். கூடல் குலத்தைச் சார்ந்த, அவன் உறவினர்கள், உடன்பிறந்தார்கள் தொடுத்த வழக்கில் சண்பையிலிருக்கும் திருத்தான்தோன்றி ஈசுவரர் கோயிலுக்கு விளக்கு ஒன்றும், திருநாகீசுவரர்க்கு ஒரு நுந்தாவிளக்கும் எரிக்க 64 பசுக்களைக் கூடலுடையான் குலத்தார் கொடுக்க வேண்டுமென முடிவு செய்யப் பெற்றதைக் குறிக்கிறது .

கல்வெட்டுச் செய்தி:

1 . . . . . . . . . ணரப் புவிமாது வளர நாமாது வி()ங்க ஜயமாது நிலவ தந்திருபதுமலர் மன்நவர் சூட மன்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கொல் சென்று திசைதொறு -
2 . . . . . . . . . . க்கி மெய்யற தழைப்ப கலிங்க மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒருகுடை நிழற்றி விர ஷிங்ஹா(த)வர்() தி முக்கொக்கிழாநடிகள்ளொடும் வி -
3 .....,,,,. சரிபற்மரான திரிபுவநசக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழசெவற்கு யாண்டு 6-வது வாணகப்பாடி இராஜெதிரவள நாட்டு பெ(ண்)ணை தெந்(க்)கரை கடம்பூரில் லிருக்கும் வெள்ளாளந் கூடலு
4................ நு[ம்] இவ்வூரில் லிருக்கும் பிச்சந் பன்மந் கண்டதும் இவ்விருவரும் தநத நிலவுரத்தாநதரத்து உ[ரு]விக் குத்திநமையில் இக்கூடலுடையான் குலத்தா(ன்) செதத(ன்) குத்திந குத்திலெ பன்மந் கண்டந் மரித்தமை
5 ............. டியிருந்து இக்கண்டந் தமப்பநான பிச்சந் பந்மனையும் இவந் மகந் பெரியானை(யு)ம் இவ தம்பி முனையனையும் இவர்தம்பி அக்களனையும் அழைத்து இக்கூடலுடையார் குலத்தான் செநத(ந்) குத்தி
6 ................. த்துப்பொம் இவநுக்கு சநிதராதித்தவற் செல்வதொரு தந்மம் செ(ய்)யவெணுமென்று சொந்ன (வி ]டத்து இவர்களும் நாட்டுக்கு எறின படி செய்வதெந்று ஸம்மதித்து இந்னாட்டு பெண்ணை வடகரை சண் பையாந வி –
7 . . . . . . . . . . ந்தொந்றிஸ்வரமுடையார்கோயிலிலே ஒரு திரு நுந்தாவிளக்கு முப்பத்திரண்டு பசுப் பொறிப்பதெந்று சொல்ல இவர்களும் இதுக்கு உடந்பட்டு இப் பந்மன் கண்டதுக்கு கூடலுடையார் குலத்தாந் செதந் தந் ப ை
8 . . . . . . . . . . ம் திருநாகிசுவரமுடையார் கொயிலி(ல்) விளக்கொந்றும் சதிராதித்தவற் செல்வதாக பொறித்த பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டொம் யிக் கொயிலில் சிவப்பிராமணரொம் இது பத்மாயெஸ்வர ரக்ஷை.

(SII XII. Part 1, No. 92 மற்றும் A.R.No. 92 of 1906)

தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா ஜம்பை, ஜம்புநாதக் கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1135-36) 3 -ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று ராஜராஜ வளநாட்டு, பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கும் கொன்றை நாட்டு முடியனுரைச் சேர்ந்தவன் பள்ளிச்சேரியடியநம்பியான கோவலராயப் பேரையன் எய்த அம்பு பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு வாளை வெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சிருடையான் மீது தவறுதலாக பட்டு இறந்துவிடுகிறான். ஆதலால் எழுபத்தொன்பது நாட்டுச் சித்திரமெழிப்பெரிய நாடுங் கூடி இக்கோவலராயப் பேரையன் மீது பழி சுமத்தி திருத்தான்தோன்றி ஈசுவரர் கோவிலில் திருநுந்தா விளக்கு எரிக்க 64 பசு கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளனர்.

கல்வெட்டு வாசகம்:

1.ஸ்வஸ்திஸ்ரீ கொ இராஜகேசரி பநராந திரிபுவநச் சக்கரவ
2.த்திகள் ஸ்ரீ குலொத்துங்கசோழதெவற்கு யாண்டு 3- ஆவது
3.வாணகொப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
4. க்கிழ்கொன்றைநாட்டு முடியனூரிருக்கும் பள்ளிசெரி அடியநம்
5. பியான கொவலராயப்பெரையன் மெற்படி நாட்டுப் பெண்ணை வட
6. கரைச் செங்குன்றநாட்டு வாளை வெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
7.ன்பற்றியுடையான் குன்றன் சிருடையானைக் கொவலராயர்(யர்) வை-
8. [வ]டையிலெ இவன் செரி அடியநம்பி விருகத்தை எய்ய பி-
9.ழைச்சு இச்சிருடையான்மெலெ அம்புபடப்பட்டமையில் எழு
10. பத்தொன்பது நாட்டுச் சித்திரமெழிப்பெரிய நாடுங் கூடி
11.இருந்து இக்கோவலராயப் பெரையன்மெலெ பழியாக்கி இவந்
12. மெலிந்தப் பழிதிரக் கொண்ட நடையாவது இன் நாட்டுச் ச
13. ண்பையாந விரராஜெந்திரபுரத்து உடையார் திருத்தாந் தொந்
14. றி ஆள்ளுடையார் ஸ்ரீ கொயிலிலெ இரண்டு திருநுந்தாவி
15. ளக்கு வைக்கக்கடவநாக்கி இவந் விட்ட சாவாமுவாப்பசு
16. அறுபத்து நாலு இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
17. ண்டொம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ………..யாடி
18. ….த் தவல் இது …………..  ராஷை உ

(SII XII. Part 1, No. 67 மற்றும் A.R.No. 67 of 1906)

மேலே கொடுத்துள்ள கல்வெட்டுச் செய்திகளானது அக்காலத்தில் வேளாண் குடிகளின்  கிராம மற்றும் நகர சபை எவ்வாறு மனுதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. அதேவேலையில் அக்காலத்தில் ஒருவருடைய சொத்தை அபகரித்தல் திருடுதல், கள்ளக் கையெழுத்திடல் போன்றவை கொலை குற்றத்தைவிட மிகப்பெரிய குற்றமாக கருதியதை கீழ்கண்ட கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.


மூன்றாம் குலோத்துங்கனின் (1213) 35-ஆம் ஆட்சியாண்டில் கொலைக் குற்றத்தைவிடவும் திருட்டுக் குற்றத்திற்கே அதி அளவில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதை கல்வெட்டு செய்தி மூலம் அறியலாம். அதுவும் கோயில் சொத்தை திருடியவர்களுக்கு அவர்களது சொத்தைப் பறிமுதல் செய்து கோயில் கருவூலத்தில் சேர்க்கப்பட்டதுடன் "துரோகிஎனும் குற்றமும் சுமத்தப்பட்டது. இவனது பிறிதொரு கல்வெட்டில் கொலைக் குற்றத்திற்கு நொந்தா விளக்கெரிக்க உத்தரவு இட்ட செய்தியும் காணப்படுகிறது.


மூன்றாம் இராசராசன் (1216-1250) காலத்திய கல்வெட்டில் இருசகோதரர்களும் அவர்களது நண்பர் ஒருவரும் கோயில் கனக்கெழுதும் வேலை பார்த்து வந்தனர். அப்போது கோயில் கட்ட வைத்திருந்த செங்கல்லை களவாடி தங்கள் வீடுகளை கட்டிக்கொண்டனர். அது குறித்தறிந்த அரசன் அவர்களது சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து அதனை விற்று வந்த தொகை 40,000/- காசுகளும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டதுடன் அக்கணக்கெழுதும் உரிமையும் வேறு ஒருவருக்கு வழங்கப்ட் செய்தியை திருநாகேஸ்வரம் கோயில் கல்வெட்டால் அறியலாம்.

  

முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் (கி.பி.1080) இடங்கை மற்றும் வலங்கைக்கு நடந்த சண்டையில் ஊரும் கோவிலும் தீவைத்து கொளுத்தப்பட்டது. இச் சண்டையால் இடிபட்ட கோயிலில் இருந்த சிலைகளையும் செல்வங்களையும் கள்ளர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். கள்ளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த செல்வங்களை ஊர் சபையோர்கள் காத்தார்கள் என்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.


கல்வெட்டுச் செய்தி

கோவிராஜ கேசரி பந்மராந சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 11 ஆவது

நித்தவிநோத வளநாட்டு காந்தார நாட்டு ப்ரம்மதேயம் ஸ்ரீராஜமகேந்தரச் சதுர்வேதிமங்கலத்து பெருங்குறிப் பெருமக்களோம் இவ்வாட்டை கற்கடக நாயற்று அபரபக்ஷத்து பஞ்சதஸியும் நாயிற்றுக்கிழமையும் ஆயில்யமும் பெற்ற இந்று ............... புளிவில்லிவகை ............ நல்லான் பட்டங் குளக்கரையிலே தந்மி செய்து பெருங்குறி கூடியிருந்து விவஸ்தை பண்ணி நம்மூர் திருமேல்கோயிலாந் ஸ்ரீமும்முடி சோழவிண்ணகராழ்வார் நிலங்கள் இறையிலி செய்து குடுத்த பரிசாவது

இத் தேவர் ஸ்ரீபண்டாரத்து யாண்டு உ-ஆவது ஆநித்திங்கள் இடங்கை வலங்கையாய் ஊரும் சுட்டு ஒடுக்கி திருமுற்றங்களும் அழித்து திருவுருக் களும், ஸ்ரீபண்டாரங்களும் கள்ளரெடுத்துக் கொண்டு போய் இருந்த இடத்து கள்ளர்க்கு பிழைத்த திரவ்வியமு(ம்), ஸ்ரீ பண்டாரத்து இரக்ஷிக்க உண்ணாமையாலும் ஊரிருக்க சி(லர் ஊர் )ஏறுமிடத்து ஸபாவிநியோகத் துக்கு த்ரவியம் வேண்டுதலாலும், திருமுற்றங்களழிவு சோரவும் புநப்ர திஷ்டை பண்ணவு மதிள் (கட்டவும்) வேண்டுதலாலும்

இத்தேவர்க் கந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் குடிஞைக்கல்லால் இராஜேந்திரசோழந்மாடைக்கு அரை மாற்றுத் தாழும் பொந் அய்ம்பதிந் கழஞ்சும் இப்பொந்துக்கு பலிசையாக பொலிஞ்ச பொந் இருபத் (தைய்ங்) கழஞ்சும் ஆகப் பொந் எழுபத் (தை)யங்கழஞ்சும் பலிசை பொலிந்த பொந்


இருபத்தைய் கழஞ்சும் ஆகப் பொந் எழுபத்தைய்ங் கழஞ்சில் யாண்டு மூன்றாவது திருமுற்றம் அழிவு சோரவும் புநப்ரதிஷ்டை பண்ணவும் குடுத்த பொந் அய்ங்கழஞ்ச நீக்கிப் பொந்தழு புதிந் கழஞ்சுக்கும். சந்திரா தித்தவற் இறையிலி செய்து குடுத்த நிலங்களாவது.......

(SII. Vol -XXIV, No.53, ARE No. 31 of 1936-37 and Select Inscriptions, Serial No: V : 5, Department of Archaeology Government of Tamil Nadu)


(தொடரும்)

Wednesday, 16 May 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 4 PandyanMallar



குற்றமும் - தண்டனையும் பகுதி - 4

x---------x----------x-----------x------------x


மருத நிலத்தைச் சேர்ந்த மள்ளர் சமூகத்தவர்கள் நடந்திவந்த கிராம சபையில் நடத்த வழக்குகளயும் அதன் தீர்ப்புகள் சிலவற்றையும் முந்தைய பதிவில் ண்டோம். மேலும் சில சான்றுகளை இந்த பதிவிலும் கொடுத்துள்ளேன்.


இரண்டாம் குலோத்துங்க சோழனின் (133-115O) ஆட்சி காலத்தில் உள்ள கல்வெட்டின் மூலம் பள்ளிச் செட்டி பெருங்காடனும், மாறன் ஆட வல்லானும் வேட்டைக்கு சென்றவிடத்தே பெருங்காடன் எய்த அம்பு தவறுதலாக மாறன் ஆடவல்லான் மேல்பட்டு அவன் இறந்தமையால் அதனை கொலைக்குற்றமாக கருதாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றமாக கருதப்பட்டது.


தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா எலவானாசூர் சிவன் கோயிலில் ( Gramardhanatha Temple) உள்ள சோழ மன்னன்  இரண்டாம் இராசாதிராசன் காலத்திய (கி.பி.1173)  எலவானசூர் கல்வெட்டு ஒன்று தன் மகள் மீது கோபம் கொண்ட தாய் கையில் வைத்திருந்த (அருவாள்மனை) அரைமணங்கோலிட்டெறிய அது தவறுதலாக வேறொரு பெண் மீது பட்டு, 20 நாள் கழித்து அவள் இறந்துவிட ஊர்ச் (நாட்டவர்) சபையோர் கூடி இது கைப்பிழையெனக் கருதி அதற்கு தண்டமாக 32 பசுக்களை கொணர்ந்து நொந்தா விளக்கெரிக்க ஆணையிட்டனர்.

கல்வெட்டு வாசகம்:
1.திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜாதியிராஜதெவற்கு யாண்டு ப

2. த்தா(ஆ)வது ஆநி மாதத்து மிலாடான ஜன நாதவள நாட்டு

3. ப் பானூர்க் கூற்றத்து மாடுரில்லிருக்கும் கொச்சாத்தந் காமந் அ –

4. கமுடையாள் (தந்] மகளை ஒரு (அரை) மணங்கொலிட்டெறிய இவளைத் தப் –

5. பி மிண்டந் காமந் மகள்மெலெ பட்டு இப்பெண் இருபதா நாளால் மரித்திது இ

6 து கை பிழைப்பாடெந மடம் நாட்டுக்கெறி நாட்டவ(ர்) ஊர்பாகங் கொண்டருளிந நா -

7 யநார் கொ(யி)லிலெ ஒரு திருநந்தா விளக்கு வை யெந்று சொல்லி இப்படிக்கு இரண்டு

8 திறவரு மிசைந்து திட்டிட்டு இக்கொச்சாத்தந் காமந் இவ்வாநிமா தத்திலே முப்பத்திரண்

9.டு பசுப் பொறித்துக் கொடுவந்து விட்டாந் இவ்விளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவற் செவதா

10. க யிது மாஹேஸ்வர ராஷை.

(SII XII. Part 1, No. 148 மற்றும் A.R.No. 148 of 1906)


தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா ஜம்பை, ஜம்புநாதக் கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜனின் (கி.பி.1012-13) 28 -ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் பிராட்டி சீராளன் என்பவன் அங்காடி பொற்றாமனின் வீடுபுகுந்து அவனது மனைவியை பிடித்து இழுத்த செயலை பொறுக்காத பொற்றமான் சீராளனை குத்திக்கொலை செய்தான். இச்செயலை கொலைக் குற்றமாக கருதாமல், அத்துமீறி நுழைதல் மற்றும் தாக்குதல் (Tress pass and assault) ஆக கருதி 15 கழஞ்சு பொன் தண்டமாக பெற்று கோயில் விளக்கெரிக்க ஆணையிடப்பட்டது.

கல்வெட்டு வாசகம்:

4……………………ஸ்ரீகொவிராச ராச ராச கெசரி ப

5.ந ரான ஸ்ரீராசராச தெவற் கியாண்டு உ ௰அ-ஆவது இவ்வூர் வியாபாரி
அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ(ண்)டிருதெ பெண்டாட்டி

6. (சி மா)தெவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும் பிராட்டி சி[ரா]ளன் இராத்திரி [சி]மாதெவி பெற்றியை வலியப்புக்கு பிடி –

7. ....... அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவெ வலிய பிடிச்சானென்று புக்கு படக் குத்தின மையில் அங்காடி

8.(பொ)ற்றாமன்மெல் வழக்கழிவு இலா(மை)யில் பிராட்டி சிராள மாடைத் தொடொருங்கி பிராட்டி சிராளனுக்காக ஒரு நொநாவிளக்கு

9. ...... த்தான் தொன்றியாள்வார்க்கு சதிராதித்தவற் நிசத முழக்கு எண்ணை யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ

10. (ன் ப)தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை யட்டுவொமானொமிந் நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பதெலூ

11. [ரொம்) சதிராதித்தவற் பநஹெஸ்வர ரஷை.





கி.பி. 1057 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குக் குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு. இரு சகோதரர்களுக்கிடையே வாய்ச்சண்டை முற்றி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில் அண்ணன் இறந்துவிட்டான். அண்ணனைக் கொன்ற தம்பிக்கு மரணதண்டனை வழங்குவதற்க்கு பதிலாக, வயதடைந்த பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மரண தண்டனையை ரத்து செய்து அரை நுந்தாவிளக்கு வைக்க அவ்வூர் சபையால் ஆணையிடப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி:

ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டபாடியுங் கொண்டு பேராற்றங்கரைக் கொப்பத்தாஹவல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது

ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதுர்வண்ண ஸநோத்பவ ஸர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய ஸாஸநம்

ஸ்ரீபூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம்(வ)ளர புகழ்க்(க)கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமைச் சித்திர மேழி தம்மம் இனிது நடாத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்

பங்களநாட்டுத் தெற்கில் வகை செளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக் கங்கபுரத்திருக்கும் வெள்ளா(ள)*ன்(ன்)

தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து, “என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுபடு(க்)கிறடத்துத்,தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான்; அடிக்க, தம்பியும் தமையனை யெதிரேயடித்தான்; தம்பிய(டி)பிச்ச அடியிலே தமையன் பட்டான்,” என்று வந்து சொல்ல, உனக்கு இவ்விரு வருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க, மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோ மென்று சொன்னான். சொல்ல, அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க, 'அர்த்தமுமில்லை என்றான்; என்ன,

ஒரு குடிக்கேடானமையிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமை(யி)லுந் திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக; தம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா” வெந்று பெருக்காளர் விதித்தமையில்,


இது சுத்தப(ட்)டிகையாகவும், இது நோக்கிநிவனுக்கு தேவை புகுந்தாத தாக(க)வும் விதித்தோம் பெருக்காளரோம். இதினை அன்றெ(ன்)று எடுத்துக் காட்டுவான், பெரிய நாட்டுக்குப் பிழைத்தான்.


மேழிநாட்டுப் பட்டனே(ன்) என்னெழுத்து. இப்படியறிவேன் மண்டை குளநாட்டுக் குராப்பாக்கத்து வெள்ளாளன் பிரம்பலூர் கிழவன் கேசவபடியன்னேன்; இப்படியறிவேன் இலத்தூர்ச் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன்னேன்; இப்படி அறிவேன் தாமரைப் பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்; இப்படியறிவேன்வயல்லாமூர் வெள்ளாளன் இலங்காடு உடையான் குட்டேறன் பொற்காளியேன்; இப்படி அறிவேன் கீரனூர்ச் சாவல் காடாடி மணிகண்டனேன்; இப்படி அறிவேன் பாடாநாட்டு கங்க(க) நல்லூர் மாதெட்டன் இருங்கோளனேன்; இப்படி அறிவேன் தச்சூழான்பாடி வெள்ளாளன் பாரந்துளர் உடையான் நக்கன் பெரியானேன்; இப்படி அறிவேன் களிக்கொற்றப்பாடி சாத்தமுழான் குந்றேறனேன்; இப்படி அறிவேன் சோமாசிபாடி வெள்ளாள(ன்) தந்தை பிருதிவலி கருமானிக்கனேன்; இப்படி அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடுசெ(ய்)வான் சித்திரமேழினாடு உடையானேன்; இவ்வகை பட்டாங்கு சொல்ல எழுதினேன், தச்சுஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திருவழுதி நாடனேன் இவை என்னெழுத்து.



(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 29 / 1998 தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பதிப்பாசிரியர்கள் –          முனைவர்      சு. இராசகோபால்,  முனைவர் ஆ. பத்மாவதி,  ஆர். வசந்த கல்யாணி, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு எண் 141 –பக்கம் 53 – 54, 1999. மற்றும்   Select  Inscriptions  Serial No:  IV :6. )

நாம் மேலே பார்த்த சான்றுகளிலிருந்து ஒருவன் கொலை செய்தாலும் அதற்க்கான காரணம் என்வென்று ஆய்வு செய்து தண்டனை கொடுத்ததும், தண்டனை பெறுபவர் குடும்ப சூழ்நிலையை ஆய்வு செய்து அவற்றிலிருந்து விளக்கு அளிக்கப்படுள்ளதும் தெளிவாகத் தெரிகிறது. 

(தொடரும்)